கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் குறைவாக பதிவான கொரோனா உயிரிழப்புகள்.!

Default Image

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 944 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இறப்பு எண்ணிக்கையானது 49,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 63,489 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 25  லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.

இதே போல கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 944 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இறப்பு எண்ணிக்கையானது 49,980 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 53,322 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 62 ஆயிரத்து 258-ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்