ஆந்திராவில் கொரோனா தொற்றால் இன்று 86 பேர் உயிரிழப்பு!

Default Image

ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,400- ஐ நெருங்கவுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த, அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,61,712 ஆக உயர்ந்துள்ளது. அதில் 86 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,368 ஆக உள்ளது.

மேலும் 8,741 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,68,828 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, 89,516 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh