சத்தியமூர்த்திபவனில் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை – காமராஜர் அரங்கத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.!

Default Image

சென்னை சத்யமூர்த்தி பவனில் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

கொரோனா பாதிப்பால் இறந்த வசந்தகுமார் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் மூலம் சென்னை தி.நகர் நடராஜன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்கு வசந்தகுமார் எம்பி உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, மறந்த வசந்தகுமாரி உடல் இன்று காலை 10.30 மணிக்கு சாத்தியமூர்த்தி பவனில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கைப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அனுமதி அளிக்கப்படாததால் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு மறந்த எம்.பி வசந்தகுமார் உடல் கொண்டு செல்லப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகள், தலைவர்கள் அஞ்சலி செலுத்த சாத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து, மதியம் 2 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செயல்படுகிறது. நாளை காலை 10 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்