இயன்றவரை இரத்த தானம், இறந்த பின் கண்தானம் – தேசிய கண்தானம் நாள் இன்று!

இன்று இந்தியா முழுவதும் தேசிய கண்கொடை நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் வருடந்தோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி தேசிய கண் கொடை நாளாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு 25 ஆம் தேதி ஆரம்பிக்கக் கூடிய இந்த நிகழ்வு செப்டம்பர்8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் கண் தானம் வழங்க விரும்புவோர் மற்றும் கண் தானம் வழங்குவதற்கான கருத்தரங்கு முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஊக்கம் தரக்கூடிய நிகழ்ச்சிகளும் இந்திய அரசு சார்பில் நடத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் மூன்று கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றவராக இருப்பதை கண்டறிந்து, அதில் 50 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்பதால் கண்தானம் செய்வோரை ஊக்குவிக்க இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒரு வயது முதல் அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம். 20 நிமிடங்களில் கண் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது, உலகிலேயே இலங்கை தான் கண் தானம் செய்வதில் முதல் இடமாக திகழ்கிறது.