அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவு!

Default Image

அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் மக்கள் மிகவும் பீதி அடைந்ததால் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்துத் துறைகள் என அனைத்து துறைகளும் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில்தற்பொழுது பள்ளிகளை துவங்குவதற்கு அரசு அனுமதி அளித்து இருப்பதால் சில தனியார் பள்ளிகள் இதுவரை நடத்தப்படாத காலகட்டங்களும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனை அடுத்து ராஜஸ்தானில் உள்ள உயர் நீதிமன்றம் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்தர்ஜித் மற்றும் நீதிபதி மகேந்திர கோயல் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோரிடமிருந்து 70% கட்டணத்தை மட்டும் வசூலிப்பது நியாயமானதாக இருக்காது எனவும், சில தனியார் பள்ளிகளின் நிர்வாகம் சட்டத்தை மீறி கல்வி கட்டணங்களை நிர்ணயிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war