தெரு விற்பனையாளர்களுடன் “பி.எம்.ஸ்வானிதி” திட்டத்தின் கீழ் உரையாடிய பிரதமர் மோடி.!

Default Image

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை தெரு விற்பனையாளர்களுக்கு உதவ ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ” PM SVANidhi” திட்டத்தின் கீழ் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி வருகிறார். அந்த வகையால், உத்தரப்பிரதேசத்திலிருந்து இன்று காணொளி மூலம் இன்று பேசினார்.

இன்றுவரை, இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அதற்காக 5.35 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுமார் 3.27 லட்சம் விண்ணப்பங்ககளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, 1.87 லட்சம் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies