எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட வேல் யாத்திரையில் பாஜகவுக்கு அனுமதி எப்படி? சீமான் கேள்வி!

வேல் யாத்திரையில் எனக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக கட்சியினர் சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜாகவினர் வேல் யாத்திரை நடத்துவதே 7.5% விழுக்காடு பிரச்சனை, 50% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீட்டு பிரச்சனை என தொடர்ச்சியாக உள்ள பிரச்சனைகளை மறைப்பதற்காக தான்.
ஏனென்றால், மக்களின் பிரச்சனைக்கு பாரதிய ஜனதா துணை நிற்காது எனவும், மக்களின் பிரச்சனையே பாரதிய ஜனதா தான் எனவும் கூறிய அவர், எனது முப்பாட்டன் முருகன் வேல் குற்றிய போது இழிவாக தான் பேசினார்கள். இந்நிலையில், என்னையே வேல் யாத்திரை செய்ய அனுமதிக்காத போது பாஜகவுக்கு மட்டும் அனுமதியளித்துள்ளது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025