#BREAKING: நிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது.. ஆர்.பி. உதயகுமார் அறிவிப்பு!

நேற்று இரவு 10.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ‘நிவர்’ புயல், இன்று அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது எனவும், தெற்கு திசையில் எதிர்பார்த்த நிலையில், புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்தது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.
நிவர் புயலின் மையப்பகுதி பாண்டிச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ‘நிவர்’ புயல் தீவிர புயலில் இருந்து புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் தற்போது நிலப்பகுதிக்குள் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வலுவிழந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025