விஜயை யாரோ குழப்புகிறார்கள், என்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம்!

விஜயின் எதிர்காலம் குறித்து தான் யோசிப்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், தன்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம் எனவும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் விஜய் பெயரில் கட்சி துவங்க இருப்பதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்த நிலையில், இது குறித்து பல சர்ச்சைகள் எழும்பியது. இதையடுத்து விஜய் தனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது இது குறித்து பேசி உள்ள விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள், தான் கட்சி தொடங்குவது விஜய்க்காக தான் எனவும், அது அவருக்கு ஒருநள் புரியும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது யாரோ அவரை குழப்பி வருவதால் தான் இவ்வாறு அவர் நடந்துகொள்கிறார் எனவும் தெரிவித்த அவர், இதன்மூலம் விஜய்க்கு ஒரு அரசியல் அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க உள்ளதாகவும், மற்றபடி இந்த வயதில் தேர்தலில் போட்டியிட்டு பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் விஜய்யின் எதிர்காலத்தைக் குறித்து யோசிப்பது தவறாக புரிந்து கொள்ளப்படுவதாகவும், தன்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!
June 30, 2025
“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
June 30, 2025