கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை – ஓபிஎஸ்..!

Default Image

எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடியை வரவேற்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

கோவை வந்தடைந்த பிரதமர் கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழா மேடையில் இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நினைவு பரிசு வழங்கினர்.

இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், தமிழகத்தின் மீதும் தமிழக மக்கள் மீதும் தனி அன்பு கொண்ட தனிப்பெரும் தலைவர் பிரதமர் மோடியை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

கோடிக்கணக்கான தமிழ் மக்கள் சார்பாக பிரதமரை வரவேற்கிறேன்.கோவையில் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடியை வரவேற்கிறேன்.

பிரதமர் மோடியின் சென்னை பயணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்