இஸ்ரேலில் நடைபெற்ற விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி…! கூட்டநெரிசலில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு…! 50 பேர் காயம்…!

இஸ்ரேலில், வடக்கே மவுண்ட் மெரான் என்ற பகுதியில், விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 28 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலில், வடக்கே மவுண்ட் மெரான் என்ற பகுதியில், விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்ட நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 28 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம், பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். அவர்களை சபீத் பகுதியில் உள்ள ஜிவ் மருத்துவமனை மற்றும் நகாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025