CBSE +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா..? இன்று விசாரணை..!

சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் மம்தா சர்மா 12 வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் முடிவு தாமதமாகும். மேலும், கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப தவறிவிட்டதால் வழக்கை ஒத்திவைப்பதாகவும், சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், ஜூன் 1 ம் தேதி 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளதாக அரசு முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது என நீதிபதிகள் மனுதாரரிடம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா..? என்பது குறித்து இன்று தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
சூப்பர் ஐடியா.., ஆன்லைன் ஷாப்பிங்கில் AI உதவியுடன் ஆடைகளை அணிந்து பார்த்து வாங்கும் முறை.!
June 6, 2025
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி.! சிறப்பம்சங்கள் என்னென்ன?
June 6, 2025
நார்வே செஸ்: வெறும் 0.5 புள்ளிகள் வித்தியாசம்., மேக்னஸ் கார்ல்சன் முன்னிலை.! 2-ம் இடத்தில் குகேஷ்..,
June 6, 2025
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு – RBI அதிரடி.!
June 6, 2025