வெடி பொருட்களை கண்டறிய உதவிய 7 வயது எலிக்கு பணி ஒய்வு…!

- ஆப்பிரிக்காவில் கம்போடியாவில் கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் கண்டறிய பெரிய வகை எலி பயன்படுத்தப்பட்டுள்ளது.
- 7 வயது நிரம்பிய மகாவா என்ற அந்த எலி, இதுவரை 71 கண்ணிவெடிகளையும் 12-க்கும் மேற்பட்ட வெடி பொருட்களையும் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
இன்று ஒவ்வொரு நாடுகளிலும் வெடிபொருட்களை கண்டறிய அதிகமாக மோப்ப நாய்களை தான் பயன்படுத்துவதுண்டு. ஆனால் ஆப்பிரிக்காவில் கம்போடியாவில் கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் கண்டறிய பெரிய வகை எலி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 7 வயது நிரம்பிய அந்த எலிக்கு மகாவா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எலி இதுவரை 71 கண்ணிவெடிகளையும் 12-க்கும் மேற்பட்ட வெடி பொருட்களையும் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மகாவாவின் இந்த செயலுக்கு துணிச்சல் மிக்க விலங்கு என்று விருது அளிக்கப்பட்டுள்ளது.
உருவத்தில் சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரை இந்த மகாவா காப்பாற்றிய பெருமை பெற்றுள்ளது. இந்த எலி 5 ஆண்டுகளாக இந்த பணியை மேற்கொண்டு வருகிற நிலையில், மகாவா ஒய்வு பெறும் வயதை எட்டியுள்ளதால் அதற்கு பணி ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025