வறண்ட சருமம் உள்ளவர்களா நீங்கள்? கடலை மாவை இப்படி உபயோகிக்காதீர்கள்!

Default Image
முக அழகு பெற இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்துவதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் காணப்பட கூடிய சுருக்கங்கள் ஆகியவை நீங்க மிக உதவியாக இருக்கும். ஆனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் நேரடியாக கடலைமாவை முகத்தில் தடவிக் கொள்ள கூடாது. ஏன் என்பது குறித்தும், எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

உபயோகிக்கும் முறை

வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவை நேரடியாக முகத்தில் தடவிக் கொள்வதால் விரைவில் முக சுருக்கங்களை ஏற்பட்டு முக அழகு குறைவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போ வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவை எப்படி உபயோகிப்பது என்று கேட்டால் கடலை மாவு மற்றும் தக்காளி, தயி,ர் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுது போல கலந்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் கடலை மாவில் தண்ணீர் சேர்க்காமல் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் வறண்ட சருமம் நீங்கும். உங்கள் சருமத்திற்கு கடலை மாவால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. வறண்ட சருமம் உள்ளவர்கள் மட்டும் தான் இப்படி செய்ய வேண்டுமா? என்று கேட்டால் இல்லை. எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அனைவருமே கடலை மாவில் இதுபோன்று தேன் அல்லது தக்காளியை சேர்த்து உபயோகிப்பது மிகவும் நல்லது. எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கடலை மாவில் தண்ணீர் கலந்து உபயோகித்தால் கூட முகத்திலுள்ள எண்ணெய் பசை நீங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies