சிவகங்கை மாவட்டம் இளையன்குடியில் தீ விபத்து – வீடு எரிந்து நாசம்!

Default Image

சிவகங்கை மாவட்டம் இளையன்குடியில் தீ விபத்து ஏற்பட்டதில், வீடு எரிந்து நாசமடைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள கீழாயூர் காலனியை சேர்ந்த வாகித் என்பவர் வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் இன்று காலை விடிந்ததும் பால் பாக்கெட் விநியோகம் செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அப்பொழுது அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ வீடு முழுவதும் மளமளவென்று பரவியதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில், வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டின் அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட பொழுது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies