கர்நாடகா : சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்த காங்கிரஸ் தலைவர்கள்…!

Default Image

எரிபொருள் விலை குறைப்பை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த கூட்டத்திற்கு எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் குறித்து பேச எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது.

இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று முதல் பத்து நாளைக்கு நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸை சேர்ந்த சித்தராமையாவும், காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் சட்டமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்து எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதன் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸை குறை கூறுவது சாக்குப்போக்கு எனவும், ஒன்றரை லட்சம் கோடியாக இருந்த கடன் தற்பொழுது 24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றரை லட்சம் கோடி எங்கு உள்ளது? 24 லட்சம் கோடி எங்கு உள்ளது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh