தென்னாப்பிரிக்க அதிபருக்கு கொரோனா..!

Default Image

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவிற்கு நேற்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது சிரில் ராமபோசா சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் மற்றும் தென்னாப்பிரிக்க இராணுவ சுகாதார சேவையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்துக்கான அனைத்துப் பொறுப்புகளையும் துணை ஜனாதிபதி டேவிட் மபுசாவிடம் ஒப்படைத்துள்ளார். 69 வயதான ரமபோசா முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார். அவர் ஓமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று அந்த அறிக்கையில் கூறப்படவில்லை. கடந்த வாரம், ரமபோசா நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றார்.

பயணத்தின் போது ஒவ்வொரு நாட்டிலும் அவரும் அவரது பிரதிநிதிகள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது தூதுக்குழுவில் உள்ள சிலர் நைஜீரியாவில் கொரோனா பாசிட்டிவ் வந்தவுடன்  நேரடியாக தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பினர். மீதமுள்ள பயணத்தில், ரமபோசா மற்றும் அவரது பிரதிநிதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 8 அன்று செனகலில் இருந்து தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்