பார்க்கும், கேட்கும் அனைத்துமே உண்மை அல்ல…விராட் கோலி பதிவு இணையத்தில் வைரல்.!!

Virat Kohli

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், லக்னோ வீரர் க்ருனால் பாண்டியாவின் கேட்சை பிடித்த பின்  ரசிகர்களை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் ஒன்றை கொடுத்தார். இதைப்போல, இதற்கு முன்பு ஏப்ரல் 10-ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில், லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பெங்களூர் ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து “சத்தம் வரக்கூடாது” என செய்தார்.

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில்  விராட் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ”அமைதியாக இருக்க வேண்டாம் இன்னும் சத்தம் எழுப்புங்க” என்பது போல் செய்கை காண்பித்தார். அதனை தொடர்ந்து நேற்றைய ஐபிஎல் போட்டிக்குப் பின் வாக்குவாதத்தில் கம்பீர் மற்றும் விராட் கோலி ஈடுபட்டனர்.


ஐபில் நடத்தை விதிகளை மீறியதாக இருவருக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 100% அபராதம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதைப்போல, லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக்கிற்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த வாக்கு வாதம் பற்றி சமூக வலைதள பக்கங்களில் விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனையடுத்து, விராட் கோலி இன்ஸ்டா ஸ்டோரில் ” நாம் பார்க்கும், கேட்கும் விஷயங்கள் அனைத்துமே அவரவரின் தனிப்பட்ட கருத்துக்கள்தான். அவை எதுவும் உண்மை அல்ல” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh