#BREAKING: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் இறந்ததை அடுத்து உயிரிழப்பு 5-ஆக உயர்வு.
ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி பகுதியில், தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் இறந்ததை அடுத்து உயிரிழப்பு 5-ஆக உயர்ந்துள்ளது. ரஜோரி மாவட்டத்தின் கன்டி வனப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜோரியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கன்டி வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்த நிலையில், மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025