17 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டி…180 ரன்கள் விளாசிய தீபக் ஹூடா!

Deepak Hooda

2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் 91, மனோஜ் பாண்டாகே 63 ரன்கள் குவித்தனர்.

இதையடுத்து 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலில், நான்காம் வரிசையில் களமிறங்கிய கேப்டன் தீபக் ஹூடா, கரன் லம்பாவுடன் இணைந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியாவில் டி20 தொடரை தொடர்ந்து T10 தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்?

அதன்படி, 19 பவுண்டரிகள், 5 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்ட அவர் 128 பந்துகளில் 180 ரன்கள் குவித்தார். இதனால், கர்நாடகாவின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறவிட்டார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த தீபக் ஹூடா,  அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் 44வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த லம்பா அதே ஓவரில் வெற்றியை உறுதி செய்தார். இதனால் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குறிப்பாக, இந்த வெற்றி தீபக் ஹூடாவின் அதிரடியால் நிகழ்ந்தது. இதன்மூலம், ராஜஸ்தான் அணியின் கேப்டன் தீபக் ஹூடா அதிரடியால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் முன்னேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts