விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி குறித்து அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா உருக்கமான பதிவிட்டுள்ளார்.

anushkasharma - virat kohli

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விராட்டின் ஓய்வு குறித்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு பல்வேறு வகையான பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் விராட்டுடன் ஒரு மறக்கமுடியாத புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, ‘அவர்கள் சாதனைகள் மற்றும் மைல்கற்களைப் பற்றிப் பேசுவார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் உன்னுடைய ரெகார்டுகள் பற்றி பேசும்பொழுது, மறைக்கப்பட்ட கண்ணீரையும், நீ செய்த தியாகத்தையும் நான் மட்டுமே அறிவேன். கோலியின் கடைசி போட்டி டெஸ்டாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், அது நடக்காமல் போனதில் வருத்தம்.

ஆனால் நீங்கள் ஒருபோதும் காட்டாத கண்ணீர், நீங்கள் ஒருபோதும் பார்த்திராத போராட்டங்கள் மற்றும் இந்த விளையாட்டு வடிவத்திற்கு நீங்கள் அளித்த அசைக்க முடியாத அன்பு ஆகியவற்றை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இதெல்லாம் உன்னிடமிருந்து எவ்வளவு பறித்துவிட்டது என்பது எனக்குத் தெரியும்.

ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்குப் பிறகும் நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும், கொஞ்சம் பணிவாகவும் திரும்புவீர்கள். இதையெல்லாம் கடந்து நீங்கள் வளர்வதைப் பார்ப்பது ஒரு பாக்கியம்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்