இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது.
இது கடந்த மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த இரண்டாவது என்கவுன்டர் ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை (13ம் தேதி) ஷோபியன் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் இந்தியப் படைகள் மூன்று லஷ்கர்-இ-தொய்பாவை வீழ்த்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.
மூன்று பயங்கரவாதிகளும் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாஃபி என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் சோபியானைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஹரிஸ் நசீர் புல்வாமாவைச் சேர்ந்தவர். குட்டாய் லஷ்கர் மற்றும் அதன் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின் தலைமை செயல்பாட்டுத் தளபதியாகவும், அதே நேரத்தில் ஷாபி எல்.இ.டி மற்றும் டி.ஆர்.எஃப் இன் உயர் தளபதியாக இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டென்மார்க் ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குட்டாய் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது, இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளும் ஒரு ஓட்டுநர் காயமடைந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் ஷோபியனில் பாஜக சர்பஞ்ச் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.