அகமதாபாத் விமான விபத்து : “ரொம்ப வருத்தமா இருக்கு”….ரஜினிகாந்த் வேதனை!
ஆண்டவன் அருளால் இனிமேல் இதுமாதிரி நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன் என விமான விபத்து குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

சென்னை : கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணித்தனர். இவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், ஒரு கனடியர், மற்றும் 7 போர்ச்சுகீசியர்கள் அடங்குவர். இந்த பயங்கர விபத்தில் முதற்கட்டமாக விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவ விடுதியில் தங்கியிருந்த 33 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
எனவே, இன்னும் இந்த துயரமான சம்பவம் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வரும் நிலையில், இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் முதல் கேள்வியாக ” கூலி படத்தில் நீங்கள் நடித்து முடித்துளீர்கள்” படம் எப்போது வருகிறது படம் எப்படி வந்திருக்கிறது? என கேட்டனர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ” கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் வரும் ஆக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே, படக்குழு சொல்லிவிட்டதே” எனவும் பேசினார். அதனைத் தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்து குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கும் பதில் அளித்த அவர் ” விமான விபத்து செய்தியை கேட்டு எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று கடவுளை வேண்டுகொள்கிறேன்” எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் நடித்துக்கொண்டு இருப்பதாக செய்திகள் வருகிறது அந்த படம் குறித்து எதாவது அப்டேட் இருக்கிறதா? என கேட்டனர். அந்த கேள்விக்கும் பதில் அளித்த ரஜினிகாந்த் ” இப்போது ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிப்பு விறு விறுப்பாக நடந்துகொண்டு இருக்கிறது” எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025