ஆசிய சந்தைகளும் ஏற்ற, இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இந்திய சந்தைகள் இன்று மீண்டும் வரலாற்றில் உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 518.22 (0.88%) புள்ளிகள் உயர்ந்து, 59,659.38 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 141.55 (0.80%) புள்ளிகள் உயர்ந்து, 17,771.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
டாடா ஸ்டீல் நிறுவனம் எதிர்பார்க்காத வகையில் 3.22 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பஜாஜ் பின்சர்வ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும் இன்று அதிகப்படியாக 3.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு தொடர்ந்து லாபத்தினை கொடுத்து வருகின்றது. உலகளாவிய சந்தையானது சற்று சரிவில் இருந்தாலும், ஆசிய சந்தைகளும் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இந்திய சந்தைகள் இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.
இதனிடையே, ஏற்றத்துடன் தொடங்கிய ப்ரீ ஓபனிங் சந்தையில் தொடக்கத்திலும் சென்செக்ஸ் 281.23 புள்ளிகள் அதிகரித்து, 59,422.39 புள்ளிகளாகவும், நிஃப்டி 79.70 புள்ளிகள் அதிகரித்து, 17,709.20 புள்ளிகளாகவும் இருந்தது. இம்மாத இறுதிக்குள் 60,000 புள்ளிகளை தொடலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…