கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் நிலைத்து ஆடி […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடி உள்ளது. இப்போது, இந்தப் போட்டியின் தனது முத்திரையைப் பதிக்க காத்திருக்கிறது. இதுவரை ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 5 ஒருநாள் போட்டிகள் […]
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர விவாகரத்துப் பெற செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இருவரும் Unfollow செய்தபோதே விவாகரத்து குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், இப்பொது விவாகரத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், சாஹல் அவரது மனைவியை பிரிவதாக வதந்தி பரவியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் இறுதியாக தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக முடித்துக் கொண்டதாக […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று (பிப்ரவரி 21)-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கராச்சி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணியை எதிர்கொள்வது எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கராச்சியில் உள்ள மைதானத்தில் விளையாடப் போகிறோம். நான் மிகவும் இந்த போட்டிக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். ஆனால், […]
உத்தரப் பிரதேசம் : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்ற கார் மேற்குவங்கத்தின் தாதுபூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எவ்வித காயமும் இல்லை. பர்தாமன் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு இந்த விபத்தால், கங்குலி சுமார் 10 நிமிடங்கள் சாலையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த விபத்தையும் பொருட்படுத்தாமல் அவர் விழாவில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் மத்தியில் அவர் உரையாடினார். […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய நிலையில், 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 228 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 231 […]
துபாய் : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபகாலமாக பார்மில் இல்லை என்கிற விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. ஆனால், கடைசியாக அவர் ஐசிசி நடத்திய 10 ஒரு நாள் போட்டியில் சில சதங்களையும், பல அரை சதங்களையும் தவறவிட்டுள்ளது பற்றி தெரியுமா? அவர் கடைசியாக விளையாடிய 10 (ஐசிசி) போட்டிகளில் 2 சத்தங்களை தவறவிட்டுள்ளார். அதைப்போல, 6 அரை சதங்களை தவறவிட்டு 40, 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். அதன்படி, ஐசிசி ஒருநாள் போட்டிகளில் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸ் : வங்கதேச அணியில் களமிறங்கிய சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹுசைன், முஸ்தாபீர் ரஹீம், தன்சிம் ஹசன் சாஹிப் ஆகியோர் டக் அவுட் ஆகினர். மிராஜ் 5 ரன்களிலும், […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்டிற்கு பதிலாக குல்தீப், ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்க தேச அணி, முதல் 10 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. எதிர்பார்த்தது போலவே, இந்திய அணியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்டிற்கு பதிலாக, அணியில் குல்தீப், ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்க தேச அணி, முதல் 10 பந்துகளிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் தடுமாறும் […]
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி இன்று, இந்திய அணி தனது முதல் போட்டியை தொடங்குகிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இந்தப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 2018 ஆசியக்கோப்பை நடைபெற்றது. இதில், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. அதே வெற்றி ரெக்கார்டை இந்திய […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த மைதானத்தில் கடந்த 2018 ஆசியக்கோப்பை நடைபெற்றது. இதில், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில், 5ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. அதேபோல், இந்த இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 41 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32 போட்டிகளில் இந்தியாவும், […]
லாகூர் : ஐசிசி சம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியுள்ள நிலையில், தொடரில் விளையாடும் அணிகள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆஸ்ரேலியா அணி வீரர்கள் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய முதல்போட்டியில் ஆஸ்ரேலியா இங்கிலாந்து அணியை வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி லாகூர் கடாஃபி மைதானத்தில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறார்கள். எனவே, தீவிரமான பயிற்சியில் வீரர்கள் இருக்கும் நிலையில் வலைப்பயிற்சியின் போது சக வீரர்களை இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஸ்டீவ் ஸ்மித் மேஜிக் ஒன்றை […]
துபாய் : 2025-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இன்று நடைபெறவுள்ள தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில், இதற்கு முன்னதாக அதாவது கடைசியாக இந்த இரண்டு அணிகளும் 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோதிய […]
கராச்சி :ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் கராச்சி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அனி அதிரடியாக விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பாகிஸ்தான் அணி 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சவுத் ஷகீல் 6 […]
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடியது. கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 107 ரன்கள் விளாசி, சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். டெவன் கான்வே 10 […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபிக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இன்று முதல் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டி கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 113 பந்துகளை […]
துபாய் : பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய பரபரப்பான தொடக்க ஆட்டத்தைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது போட்டி IND vs BAN அணிகள் மீது ரசிகர்களின் கவனம் உள்ளது. அதன்படி, இந்தியாவும் வங்கதேசமும் நாளை (பிப்ரவரி 20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவரும் போட்டி என்பதை உறுதியளிக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும், […]
டெல்லி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக இன்று பிற்பகல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் கில் : ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . இதற்கு முன்னர் 2023 […]