தென்மேற்குப் பருவமழை முடிந்தாலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை , தூத்துக்குடி போன்ற பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் மதுரையில் பரவலாக மழை பெய்து வருவதால் , இண்டிகோ விமான நிறுவனம் தங்களது பயணிகளின் ஒரு அறிவுத்தலை ட்விட்டரின் மூலமாக கூறியுள்ளது. #6ETravelAdvisory: Request all passengers to keep enough travel time in hand due to heavy rains […]
மதுரையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் இயங்கி வரும் வண்டி பாண்டியன் விரைவு ரயில். இந்த வண்டி, தினந்தோறும் 700க்கும் மேற்பட்ட பயணிகளை மதுரையில் இருந்து சென்னை வரை அழைத்துச் செல்கிறது. தற்பொழுது இந்த ரயிலின் சேவை தொடங்கி 50ஆம் ஆண்டு ஆகிய நிலையில், அதனை சிறப்பிக்கும் விதமாக ரயிலில் பூக்களால் அலங்கரித்து, ரயில் என்ஜினில் ஐம்பதாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற போர்டும் வைத்தனர். மேலும், மாணவ மாணவியர்கள் மற்றும் ரயிலில் பயணிப்போர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு […]
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி சில மாவட்டங்களில் உறுதியாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இதுவரை 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி, அவர்களுக்கு அங்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மதுரையில் டெங்கு காய்ச்சல் 6 பேருக்கு இருப்பது அறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் கூறுகையில் இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு டெங்கு இருப்பதாகவும், மேலும் 47 பேருக்கு […]
மதுரையில் உள்ள பிரபல ரமணா மெஸ் மூன்று கிளைகளைக் கொண்டது. இதன் உரிமையாளர் செந்தில். இவர் திடீரென தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இவரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியது. இதனால் கோபாலகிருஷ்ணன் கடத்தியிருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் அவரிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. செந்திலுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை அதனால் ஒரு ஜோதிடர் அதிக மாடுகளை வாங்கி வளர்த்தால் பணம் பெருகும் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பெயரில் […]
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் நரிக்குறவர் காலனி சார்ந்த பச்சையம்மாள் 72 இவர் வழக்கம்போல நேற்று முன்தினம் தனது கணவருடன் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் மதுபோதையில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் கையை கட்டி , வாய் பொத்தி தாக்கினார். இதில் மூதாட்டி கை முறிவு ஏற்பட்டது. பின்னர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனால் உடல் குறைவு ஏற்பட்டு உள்ளது. பின்னர் மூதாட்டியை சத்திய மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி […]
மதுரையில் காவலராக பணிபுரிந்து வந்தவர், காவலர் பழனிக்குமார். இவரின் செல்பேசிக்கு பாலியல் செய்யும் கும்பல் சிலர், “உல்லாசமாக இருக்க தொடர்பு கொள்ளுங்கள்” என்ற குறுந்செய்தி வந்தது. இதனையடுத்து, குறுந்செய்தி அனுப்பிய கும்பலை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், அந்த செய்தியை அனுப்பிய ஒரு பெண் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளார். மேலும் இது குறித்து விசாரிக்கையில், பல ஆண்களுக்கு இந்த செய்தியை அனுப்பி, அவர்களிடம் உல்லாசமாக இருந்து, அதனை வீடியோ எடுத்து […]
பொதுவாகவே மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தாரின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்டுகிறது. இதில் தமிழகத்தில் ரயில்வே பணிகளில் அண்மைக்காலமாக பெரும்பாலும் வெளிமாநிலத்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதற்கான காரணங்களாக தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு இல்லை என கூறப்படுகின்றன. தற்போது மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே வேலைகளுக்க்கான மத்திய அரசு தேர்வானது 2017இல் நடைபெற்றது. இதற்கான பணிநியமனம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 572 காலிப்பணியிடங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிமாநிலத்தவர்களே இடப்பிடித்துள்ளனர் […]
மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்தவர் ஜெகன் நாதன். இவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இவர் மதுரை கோமதிபுரம் அருகே காரை ஒட்டி சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் மீது ஜெகன் நாதன் கார் வேகமாக மோதியுள்ளது. இதில் தமிழரசன் என்கிற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 துப்புரவு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே புதுமாப்பிளையான ஜெகன் நாதன் பொது […]
மதுரை ரயில் நிலையமானது பெரிய ரயில் நிலையம் என்பதை விட மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மதுரை ரயில்நிலையம் தான் இந்தியாவின் இரண்டாவது அழகான ரயில் நிலையம் என சென்றவருடம் அறிவிக்கப்பட்டது. தற்போது மதுரை ரயில் நிலையம் முதலிடம் பிடிக்க பல்வேறு முயற்சிகளை நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக சுமார் 10 கோடி செலவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை ரயில் நிலையத்தில், படிக்கட்டுகளில் பளிங்கு கற்கள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைத்தல் […]
மதுரை, திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில், காரில் வந்தவர்கள், சுங்க கட்டணம் தர மறுத்து, அங்குள்ள ஊழியர்களை கை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால், அங்குள்ள ஊழியர்கள் யாருக்கும் காயம் இன்றி தப்பியுள்ளார். இந்த சம்பவத்தின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த சசிகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுமுள்ளவர்கள் காரி தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து, காரில் வந்தவர்கள் உசிலம்பட்டி அருகே, காரை நிறுத்திவிட்டு ஆட்டோவில் தப்ப முயன்ற போது, வாலாந்தூர் போலீசார் தப்பியோடிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். […]
மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் அதிகம் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்காமல் இருந்த செயின் பறிப்பு திருடனை, போலீஸார் மிக எளிதாக சுற்றிவளைத்து பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவர் பல செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு போலிஸில் சிக்காமல் வந்துள்ளார். அந்த திருடனை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த திருடன் அண்மையில் நடைபெற்ற காவலர் பணி தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளான். அந்த தேர்வினை எழுத ஒரு […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டி சார்ந்தவர் ராகவானந்தம். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு பார்க்கவி மற்றும் யுவராஜ் என இரு குழந்தைகள் இருந்தனர். ராகவானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவரின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளும் எலி மருந்து மருந்துகள் கேக்கை சாப்பிட்டு உயிரிழந்தனர். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த ராகவானந்தம் தன் குழந்தைகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கீழவளவு காவல் நிலையத்தில் புகார் […]
மதுரையை சார்ந்த திமுக பிரமுகரான ராஜா என்பவர் நேற்று இரவு பதினோரு மணி அளவில் கே .புதூர் ஜவஹர் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து ஓட ஓட வெட்டிக்கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே திமுக பிரமுகர் ராஜா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த […]
மதுரையை அடுத்த ஜெய்ஹிந்த்புறத்தை சார்ந்தவர் தென்னரசு . இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் காருக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். தென்னரசு அவரிடம் வாகன ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை செய்து வந்தார். இதை தொடர்ந்து சரவணனுக்கு , தென்னரசு மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் சரவணனை தென்னரசு வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இரவு தென்னரசு தூங்கி கொண்டு இருந்த போது விஜயலட்சுமி சரவணனை வரவைத்து தென்னரசுவின் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கால்வாயில் ரத்த கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது.அதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாக்கு மூட்டையை மீட்டு திறந்து பார்த்துள்ளனர்.அப்போது அதில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அந்த நபரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பின்பு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினருக்கு […]
மதுரை மாவட்டம் ஆனையூரை சேர்ந்தவர்கள் சுகன்யா மற்றும் எப்ஸியா. இவர்கள் இருவரும் பள்ளி பருவ தோழிகள். மதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் 2007-ம் ஆண்டு 10-ம் வகுப்பு வரை ஒன்றாக பயின்ற இவர்கள், பள்ளியில் இருவரும் ஒன்றாக சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், பெண்ணாக இருந்த எப்ஸியா, காலப்போக்கில் அவரது உடலில் ஏற்பட்ட பாலின மாறுபாட்டால், ஆணாக மாற துவங்கியுள்ளார். இதனை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் சுகன்யாவை கண்டித்துள்ளனர். இதனையடுத்து, 2012-ம் ஆண்டு சுகன்யாவின் பெற்றோர், […]
மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே மதுபான கடை ஒன்று உள்ளது. அங்கு 25 வயது இளைஞர் ஒருவர் அளவுக்கு மீறி மது அருந்தி வந்தார். அதனால் அவருக்கு போதை தலைக்கு மேல் ஏறியது. இந்நிலையில் அங்கிருந்து கிளம்பிய அவர், போதையில் அங்கிருந்த சாக்கடையில் ஏதோ ஏசி போட்டு பஞ்சிமெத்தையில் படுத்து உறங்குவதுக்குபோல் உறங்கிக்கொண்டிருந்தார். இதனை அங்குள்ள மக்கள் வதங்களின் மொபைலில் வீடியோ எடுத்தனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாயம் செய்து வருகிறார் பால்சாமி. இவருக்கு பாப்பம்மாள் என்கிற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளார்கள். இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து செய்து வந்துள்ளார். மற்ற நேரங்களில் தன் வீடு ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி போவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆடு மேய்த்து வீட்டு இரவு ஆடுகளுக்கு காவலாய் ஆட்டு பட்டியில் படுத்து உறங்கியுள்ளார். இன்று காலை அவர், தலையில் பலமாக அடிபட்டு இறந்து […]
இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரதமர் நரேந்திரமோடியின் தம்பியான பங்கஜ் மோடி வந்து தரிசனம் செய்தார். இவருடன் அதிமுக தலைவரும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடன் வந்திருந்தார். இவர் இதற்க்கு முன்னர் மக்களவை தேர்தல் நடைபெறும் போது ராமேஸ்வரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.