மதுரை

எச்சரிக்கை விடுத்த மதுரை ஆட்சியர்….! வைகை அணையில் நாளை முதல் 3,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது….!!!!

வைகை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வைகை அணையில் இருந்து நாளை முதல் 3,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். வைகை ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#Madurai 1 Min Read
Default Image

ஆர்கே நகரில் தினகரன் வெற்றிபெற்ற வழி வேறு …!இனி அதற்கு வாய்ப்பு இல்லை ….! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை தனக்கன்குளத்தில் அதிமுக பிரசார சைக்கிள் பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடக்கி வைத்தார்.இதன்  பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். ஆர்கே நகரில் குறுக்கு வழியில் வெற்றிபெற்றதுபோல் தினகரனால் வரும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  

#ADMK 2 Min Read
Default Image

தேனி இளைஞரிடம் ஆன்-லைன் மூலம் ரூ.1.5 கோடி மோசடி …!வழக்கு சிபிஐக்கு மாற்றம் …!

தேனி இளைஞரிடம் ஆன்-லைன் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தேனி இளைஞர் வினோத்குமார் என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்தார்.இந்த  மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆன்-லைன் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

#ADMK 2 Min Read
Default Image

பேராசிரியர் தங்கமுத்து நியமனம் ரத்து…!சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு …!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில், பேராசிரியர் தங்கமுத்து நியமனம் ரத்து என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  புதிய உறுப்பினரை நியமிக்க காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவுக்கு  உத்தரவு பிறப்பித்தது.மேலும்  மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில், பேராசிரியர் தங்கமுத்து நியமனம் ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

மருத்துவக் கல்லூரியில் ராகிங்…! 19 மாணவர்கள் 6 மாதம் சஸ்பெண்ட்…!

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த 19 மாணவர்கள் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்  என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி கூறுகையில்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த 19 மாணவர்கள் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மேலும்  மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கவும் ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது ராகிங் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து 19 […]

#ADMK 2 Min Read
Default Image

அமைதியான முறையில் பேரணி நடத்த வேண்டும்..!! முக.அழகிரி வேண்டுகோள்.

நினைவு பேரணி அமைதியாக முறையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்… மதுரை , மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் ஆர்ப்பாட்டம் வேண்டாம் என இதுகுறித்து மதுரையில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் : திமுக தலைவர் மு.கருணாநிதியின் அவர்களின்  30 ஆம் நாள் நினைவை  முன்னிட்டு  என்னுடைய  தலைமையில்  அமைதிப் பேரணி  செப்டம்பர் 5 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகின்றது. இந்த […]

#DMK 5 Min Read
Default Image

மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் …!20 மாணவர்கள் சஸ்பென்ட் …! மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் அதிரடி பரிந்துரை

மதுரை மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட புகாரில் 20 மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் கூறுகையில், மருத்துவக்கல்லூரி முதலாண்டு மாணவர்கள் விடுதியின் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது  கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்புக் குழு இன்று  விசாரணை நடத்தி இறுதி முடிவெடுக்கும் என்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன்  கூறியுள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

36 பேர் விடுதலை..!!

மதுரை: மத்திய சிறை சாலையிலிருந்து 36 ஆயுள் தண்டனை கைதிகள் 6-ம் கட்டமாக நன்னடத்தை விதியின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் உத்தரவுப்படி, சிறை நன்னடத்தை விதிகளின் படி கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.அதன்படி தமிழக சிறை சாலைகளில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க மதுரை மத்திய சிறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை […]

#Chennai 3 Min Read
Default Image

மத்திய-மாநில தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

மத்திய-மாநில தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல், பாடியூர் மண்மேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்க்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய தொல்லியல் துறை இயக்குனர், மாநில தொல்லியல் துறை ஆணையர் மற்றும் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது .

#ADMK 1 Min Read
Default Image

எனக்கும் நீங்களே தலைவராக இருங்க…!! கட்சியில் சேர்த்துக்கோங்க….

மதுரை: திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார். திமுகவின் முன்னால் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அவர்களின் மரணத்திற்கு பிறகு முக.அழகிரியா , ஸ்டாலினா என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்தது.ஆனால் முக.ஸ்டாலின் தான் அவருடைய ஆளுமையை உயர்த்தி திமுக தலைவராக பதவியேற்றுள்ளார். முக.அழகிரி என்னிடம் தான்  திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் வருகின்ற செப்டம்பர் […]

#DMK 4 Min Read
Default Image

தர்மயுத்தம் வெற்றி..!! ops மதுரையில் பேட்டி.

மதுரை:திருப்பரங்குன்றத்தில் கோவில் தரிசனம் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்   சசிகலா குடும்பத்திற்கு எதிராக நான்  நடந்த தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்…. இன்று அதிகாலையே மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அவர் , அதிமுக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கட்சியில் இப்போது எந்த குழப்பமும் இல்லை. அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். அதுகுறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி […]

#ADMK 3 Min Read

மதுரை அடுத்தடுத்து கார் மோதி விபத்து..!! அச்சத்தில் பாதசாரிகள்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் உள்ள  நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின…   மதுரை அருகே உள்ள  தோப்பூரைச் சேர்ந்தவர் ஒச்சம்மாள். இவர் புதன்கிழமை காலை தோப்பூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார்.அப்போது கேரளாவிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற வேகமாக கார் ஒன்று வந்தது. தீடிரென சாலையை கடக்கும் மூதாட்டியை காரை ஓட்டிய  கீர்த்தி பென்டின் என்பவர் எதிர்பாராத விதமாக பார்த்தவுடன், சுதாரித்துக் கொண்டு  வாகனத்தை தீடீரென்று  பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். அப்போது  பின்னால் வந்த […]

TAMIL NEWS 3 Min Read

இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கு கடும் கட்டுப்பாடு…! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

2017ல் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போது விதித்த கட்டுப்பாடுகளை இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கும் விதிக்க வேண்டும் என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்   கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி முருகானந்தம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 2017ல் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போது விதித்த கட்டுப்பாடுகளை இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கும் விதிக்க வேண்டும்.இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கு கொண்டு வரப்படும் ஜோதி நினைவிடத்திலிருந்து 1 கி.மீ.,தொலைவிற்குள் இருந்து தான் வரவேண்டும் என்பது விதி […]

#ADMK 2 Min Read
Default Image

மதுரையில் தொடர் மழை …!!

மதுரையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகின்றது.குறிப்பாக கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், திருப்பாலை, ஊமச்சிகுளம், கோ.புதூர், பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஒத்தக்கடை உள்பட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. பகலில் கடுமையான வெயில் வாட்டி எடுக்கும் இவ்வேளையில் மாலை நேரம் பொழியும்  மழையை மக்கள் ரசிக்கின்றனர். தொடர்ந்து 4 நாட்களாகமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் மழை சாலையில் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது..

#Weather 2 Min Read
Default Image

பெற்று ஆற்று மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு உத்தரவு …!

கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது . பாளையங்கோட்டையை சேர்ந்த சுடலை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தொடர்ந்த பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,பட்டா நிலத்தில் சவுடு மணல் அள்ள அனுமதி பெற்று ஆற்று மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு உத்தரவு பிறப்பித்தது. DINASUVADU

#ADMK 2 Min Read
Default Image

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கைதி மரணம்…!!

நெல்லை மாவட்டம் மேலபாளையத்தை அடுத்த பிராஞ்சேரி வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சி (72). மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து  தண்டனை பெற்றுக்  கொண்டு இருந்தார்.இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறை அதிகாரிகள் இவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பேச்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்… DINASUVADU 

TAMIL NEWS 1 Min Read
Default Image

சிறையில் கைதி தற்கொலை முயற்சி ..!!

  மதுரையில் சிறையில்  கைதி தற்கொலை முயற்சி மதுரை: மதுரை கரிமேடு எம்.கே. புரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் ஆதிபரமேஸ்வரன் (வயது20).கைதாகி மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். கடந்த சில நாட்களாக தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறிய ஆதிபரமேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அங்குள்ள போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அதிகாரிகளின் அணுகுமுறையால் மனமுடைந்த ஆதிபரமேஸ்வரன் இன்று காலை யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறையில் […]

TAMIL NEWS 3 Min Read
Default Image

மதுரை திருமங்கலம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்..!!

  மதுரை பேரையூர்: திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் ஆயிரம் கண்ணுடையாள் கோவில் அருகே  ராஜபாளையம்- திருமங்கலம் ரோட்டில் சிறிய பாலம் உள்ளது அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அடியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருமங்கலம் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் அந்த பகுதியில் பார்த்தபோது 40 வயது மதிக்கத்தக்க ஆணின்  சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. உடனே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி […]

TAMIL NEWS 2 Min Read
Default Image

திடீரென மு.க.அழகிரியின் கூட்டத்திற்கு வந்த பாஜகவினர் …!அழகிரிக்கு அழைப்புவிடுத்த பாஜக…! அதிர்ச்சியடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள்…!

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திடீரென மு.க.அழகிரி வீட்டிற்கு  பாஜக நிர்வாகிகள் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை […]

6 Min Read
Default Image

மு.க.அழகிரி வீட்டில் குவியும் தொண்டர்கள் …!நெருங்கும் திமுக தலைவர் தேர்தல் …!தீவிர ஆலோசனையில் அழகிரி படை

மதுரையில் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று பரப்பராக […]

#ADMK 6 Min Read
Default Image