மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது28) ரேஷன் கடை ஊழியர். இன்று காலை 9 மணி அளவில் வாழைத்தோப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையை திறந்து பொருட்கள் விநியோகம் செய்ய தொடங்கினார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முனுசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் ரேஷன் கடைக்குள்ளேயே துடிதுடித்து பலியானார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டது. […]
மதுரை அருகே வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை கீழைத்துறை அருகே வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதில் விருதுநகரை சேர்ந்த நரசிம்மன், வாழைதோப்பு பகுதியை சேர்ந்த முனுசாமி ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மேலூர் அருகில் உள்ள கீழையூரில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக அறிவிப்பு பலகை ஒன்று திருப்பத்தூர் மேலப்பட்டி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. 868 மனித சக்தி நாட்கள் இதற்காக செலவிடப்பட்டதாகவும், அதற்காக தினசரி ஊதியம் ரூ.205 தரப்பட்டதாகவும் அதில் உள்ளது. மூலப்பொருட்கள் ரூ. 5ஆயிரத்திற்கு வாங்கி மனித சக்திக்காக ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் செலவிடப்பட்டதாகவும் அதில் உள்ளது.ரூ.1.83 லட்சம் செலவில் கிராம ஊராட்சியில் மரக்கன்று நடப்பட்டதாக அறிவிப்பு பலகை மட்டுமே உள்ள நிலையில், […]
தமிழகஅரசை கண்டித்தும், முதல்வர் பழனிச்சாமி பதவி விலக கோரியும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தாலுக்கா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். […]
ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட காளைகள் ,மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அவிழ்த்துவிடப்பட்டன மேலூர் அருகே கோவில்பட்டி பெருமாள், அழகியத்தாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கிராமத்தினர் சார்பில் ஜல்லிகட்டில் பங்கேற்ற காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்க்கப்பட்டு, சீறிபாய்ந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். இந்தமுறை வழிதெரியாமல் காணாமல் போகும் காளைகளை கண்டுபிடிக்கும் வகையில், ஜி.பி.எஸ் கருவியை சில காளைகளின் கழுத்தில் கட்டி, […]
அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இதையொட்டி அழகர்கோவிலில் நாளை (வியாழக்கிழமை) மாலை முதல் திருவிழா தொடங்குகிறது. அன்று மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் கோவிலுக்குள் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாளும் இதே நிகழ்ச்சி நடைபெற்று, 28-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கள்ளழகர் தங்க பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்படுகிறார். தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட […]
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 27). ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். ரெயில்வேயில் பணியாற்றினார். இவரும் தச்சநல்லூர் சங்கரநாராயணன் மகள் காவேரியும் காதலித்தனர். இதற்கு காவேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி அவர்கள் 3.5.2016 அன்று வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டிற்கு மகளை தேடி சங்கரநாராயணனும், அவருடைய மனைவி செல்லம்மாளும் சென்றனர். அப்போது வீட்டில் விஸ்வநாதனின் சகோதரி கல்பனா, அவருடைய குழந்தையுடன் இருந்தார். இருவரும் கல்பனாவை வெட்டிக்கொலை […]
மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது கடந்த ஆண்டு அணையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் திறக்க படவில்லை ஆனால் சில நாட்களாக பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு நீர்வரத்து தொடந்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று 37.96 அடியாக இருந்தது மொத்தம் 71 அடி என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை,ஆண்டிபட்டி,சேடபட்டி ஆகிய […]
சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மனின் ஆட்சி நேற்று முதல் தொடங்கியது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரப்பெருமானும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி […]
உயர்நீதிமன்ற மதுரை கிளை,கூட்டுறவு சங்கத் தேர்தலை முறைப்படி நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை மே இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் எதிர்கட்சியினரின் மனுக்கள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக வெற்றி அறிவிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தலாம் ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து […]
சிபிசிஐடி போலீஸார்,பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக தலைமறை வான மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககப் பேராசிரியரின் மனைவியிடம் நேற்று விசாரணை நடத்தினர். மேலும் இவ்வழக்கு தொடர் பாக மற்றொரு பேராசிரியரும் தலைமறைவாக உள்ளதால் சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கல் லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தவறாக வழிகாட்டியதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழக […]
திருமங்கலம்:ராம் இவர் திருமங்கலம் அருகேயுள்ள முத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் . இவர் ஒடிசா மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் பிளஸ் 2 முடித்துள்ள இவர் தாயுடன் முத்தப்பன்பட்டியில் வசித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மதுரை செல்வதாக தாயிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 9 பவுன் நகை அணிந்திருந்த அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில் தந்தை ராம் கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் […]
மேலூர்: சையது பீடிகள் நிறுவன மேலாளர் முகமது அப்துல்லாவும், 5 பூமார்க் பீடி நிறுவன மேலாளர் அம்சாபாயும் மேலூர் பகுதியில் தங்களது நிறுவனம் பெயரில் போலியாக பீடிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மதுரை போலீஸ் எஸ்பியிடம் புகார் செய்தனர்.இதனை அடுத்து நேற்று மேலூர் பஸ்ஸ்டாண்ட் பகுதி, மார்க்கெட் பகுதி, திருச்சி ரோடு ஆகிய இடங்களில் எஸ்பி உத்தரவின்பேரில் மேலூர் டிஎஸ்பி சக்கரவர்த்தி திடிரென சோதனை நடத்தினார். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போலி பீடிகள், குட்கா ஆகியவை […]
மதுரை:சரவணன் இவர் செக்கானூரணி அருகே கத்தப்பட்டியை சேர்ந்தவர் . இவரது மனைவி பெயர் சுவேதா. இவர் மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். இவர் 10 பவுன் நகையை கையில் வைத்துகொண்டு நடந்து சென்றார்.அப்போது அப்பகுதியில் சாலையில் சில்லறை நாணயங்கள் சிதறி கிடந்தன. உடனே சுவேதா தனது கையில் இருந்த நகை பையை தரையில் வைத்து விட்டு நாணயங்களை எடுக்க சென்றார்.அப்போது சுவேதாவின் பையில் இருந்த நகையை அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத பெண் எடுத்து […]
மதுரை:மதுரை முடக்குசாலை பகுதியில் மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தும்படி கூறினர்.அப்போது காரில் வந்தவர்கள், காரை நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர்.பின்னர் காரை கைப்பற்றி போலீசார் அதிலிருந்த 124 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சத்து 40 ஆயிரமாகும். இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டம் வார்தன்னாபட் பகுதியை சேர்ந்த ராஜூ […]