ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட காளைகள் ,மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அவிழ்த்துவிடப்பட்டன மேலூர் அருகே கோவில்பட்டி பெருமாள், அழகியத்தாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கிராமத்தினர் சார்பில் ஜல்லிகட்டில் பங்கேற்ற காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்க்கப்பட்டு, சீறிபாய்ந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். இந்தமுறை வழிதெரியாமல் காணாமல் போகும் காளைகளை கண்டுபிடிக்கும் வகையில், ஜி.பி.எஸ் கருவியை சில காளைகளின் கழுத்தில் கட்டி, […]