2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, ஜனவரி 1 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த டிசம்பர் மாதம் 28ந-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் […]
சென்னை:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் இன்று முதல் ஜன.29 ஆம் தேதி வரை 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,தென்தமிழகம்,வட கடலோர மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதே சமயம்,தமிழகத்தில் ஏனைய […]
தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு ஓபிஎஸ் கண்டனம். தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்வத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த […]
தஞ்சை:எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சை வடக்கு வீதியில் உள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக கட்சி நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களின் இரண்டடியிலான திருவுருவச் சிலை மர்ம நபர்களால் இன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது.இதற்கு,அதிமுக இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக பிரமுகர்கள்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில்,இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து,சிலையை சேதப்படுத்திய […]
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? லாவண்யாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? என கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் […]
சென்னை:மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு,ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் எனவும்,எந்த உருவில் வந்தாலும் சமரசமின்றி எதிர்ப்போம் எனவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில்,தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து,வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில்,மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி […]
இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி. சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுன் இளையராஜா என்பவர் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசு எடுக்க வேண்டிய […]
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 17 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிப்பு. நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரி ஏடிஜிபி வெங்கட்ராமன், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சிவனருளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான சிறப்பு பதக்கம் 88 பேருக்கு […]
மொழிப்போர் தியாகிகளின் நாள் இன்று. அவர்களின் தியாகங்களை இந்த நாளில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் போற்ற வேண்டும் என ராமதாஸ் ட்வீட். இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில், தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து, வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தாய்மொழியாம் தமிழை அழிக்கும் […]
ஆளில்லா வான்வழி வாகன கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக சூரிய சக்தி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன ஆளில்லா விமான கழகத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆளில்லா வான்வழி வாகன கண்காட்சியை தொடங்கிவைத்து வான்வழி வாகன செயல் விளக்கத்தை பார்வையிட்டார். கண்காணிப்பு ட்ரான், தொலைதூர கண்காணிப்பு ஆளில்லா விமானம் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடியில் அமைத்த சூரிய மின்சக்தி மையத்தையும் […]
நாளை நாடுமுழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், டிடிவி தினகரன் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நாளை குடியரசுதினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், யுடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய […]
கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரியாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட். நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல்களி சிறப்பாக நடத்தி முடிக்க, தேசிய தேர்தல் ஆணையம் மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளை நியமித்திருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் சிறப்பாக […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது விசாரணை மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பணியின் போது அரசு பேருந்துகளில்(A/C பேருந்து உட்பட) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) மற்றும் அவர்களின் மனைவி அல்லது கணவர் அல்லது உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க […]
சென்னை:மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று,சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில்,தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து,வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில்,மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் […]
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டிப்பு. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மீண்டும் 30 நாள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 27-ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை […]
தமிழகத்தில் உள்ள 22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால்,அவற்றை உடனடியாக இடிக்க அரசின் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததையடுத்து,தமிழகத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசால் தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டு,கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள 22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால்,அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள அரசின் தொழில்நுட்ப வல்லுநர் […]
போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை மற்றும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. இந்திய குடிமைப் பணித் தேர்வுகள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள்,ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள்(UPSC, TNPSC, RRB) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையில்,கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில்,மத்திய […]
அரசு கல்லூரி,பல்கலை.ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும்,மன உளைச்சலுக்கும் ஆளாகும் கல்லூரி ஆசிரியர்கள்,விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் எனவும்,இவற்றைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக […]
கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்தையும் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மாநிலத்தில் நிலவும் கொரோனா […]
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு. 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. […]