பில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப்பில் – லாக்டு ரெக்கார்டிங்ஸ் (Locked Recordings) என்கிற அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பின் பீட்டா சமீபத்திய பதிப்பான பதிப்பான 2.18.102-ல் இந்த புதிய அம்சமானது ஏகப்பட்ட ஆடியோ மெஸேஜ்களை அனுப்பும் பயனர்களுக்கு மிகவும் வசதியான ஒரு அம்சமாகும். வழக்கமாக வாட்ஸ்ஆப் வழியாக ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப, சாட்டில் உள்ள ரெகார்ட் பட்டனை தொடர்ச்சியாக அழுத்தி, பேசி முடித்த பின்னர் பட்டனை ரிலீஸ் செய்வோம். இனி அப்படி […]
யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ப்ரூனோ பகுதியில் யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு வந்த பெண் ஒருவர் திடீரென துப்பாக்சிச் சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். பின், துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார். காயமடைந்த […]
ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் மற்ற அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளியது. இந்தியாவில் அமேசானைப் போல், பிளிப்கார்ட்டு, ஸ்னாப் டீல் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களும் பிரசத்தி பெற்றது. இந்நிலையில், அமேசானுக்குப் போட்டியாக இருக்கும் வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கி, வர்த்தக்ததில் முதல் இடத்தைப் பிடிக்க எண்ணியது. ஆனால், வால்மார்ட்டின் இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட அமேசான் நிறுவனம், முன்னெச்சரிக்கையாக தற்போது பிளிப்கார்ட்டை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் […]
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) நிறுவனத்தை திறம்பட நடத்த இன்னொரு வாய்ப்புத் தாருங்கள் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த Cambridge Analytica என்ற நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயணாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டாதை மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டுமென்று Facebook நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போர்க்குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனிதர்கள் […]
ஆப்பிள் நிறுவனம் வளைவான செல்போன் திரைகளுக்கு அருகே விரல்களை கொண்டு சென்றாலே செயல்படத்தக்க வகையில் புதிய தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறது. துவக்க கால ஆய்விலிருக்கும் இந்த தொழில்நுட்பத்தை சந்தைக்கு கொண்டு வர இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என கருதப்படுகிறது. ஸ்மார்ட் போன்கள் சந்தையில் நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில் தனது தனித்தன்மையை நிலை நிறுத்தும் விதமான முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வளைவான அமைப்பைக் கொண்டிருக்கும் செல்போன் திரைகளை தொடுவதற்கு பதிலாக […]
மிகச் சிறந்த அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மீதான மோகத்தை குறைத்தது ஒன்ப்ளஸ்(One plus) நிறுவனம். அந்நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி-க்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மிக விரைவில், நேற்று ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ அம்சங்கள் வெளியாகியுள்ள நிலைப்பாட்டில், தற்போது ஒன்ப்ளஸ் 6-ன் சேமிப்பு மாடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது […]
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் வரும் அனைத்து உள்ளடக்கங்களும்(Contents) முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு பயணாளர்களுக்கும் பொருந்தும். பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் சொந்த துணை நிறுவனமான ஏஎல்டிபாலாஜி, பாரதி ஏர்டெல் நிறுவனத்துடனான பயனளிக்கும் கூட்டுறவு குறித்து அறிவித்தது. இதன்மூலம் ஏர்டெல் டிவி அப்ளிகேஷன் பயனர்களுக்கு ஏஎல்டி-யின் முதலீட்டில் இருந்து சிறப்பான டிஜிட்டல் உள்ளடக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. இந்த கூட்டுறவின் மூலம் ஏஎல்டிபாலாஜியின் […]
வாட்ஸ்ஆப் ப்ளஸ் எனப்படும் ஒரு போலியான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷன் இணையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட தகவலை திருடுவதற்கு சாத்தியமான திறனை கொண்டுள்ளது. இந்த வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஆனது ஸ்பேம் கமெண்ட்ஸ் மூலம் பரவுகிறது. அந்த ஸ்பேம் கமண்ட்ஸ் ஆனது, வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஏபிகே-வை டவுன்லோட் செய்ய வழிவகுக்கின்றன. இந்த “வாட்ஸ்ஆப் ப்ளஸ்” ஆனது, கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போலி செயலியான “வாட்ஸ்ஆப் ரிஸ்க்வேர்” அப்ளிகேஷனின் மற்றொரு மாறுபாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போலி ஆப் ஆனது, […]
ஷாப்பிங் மால், உணவகம் என எங்கு சென்றாலும் இலவச வைபை நம்மை வரவேற்கும் போது சில நிமிட பேஸ்புக், அல்லது வாட்ஸ்ப் செக் செய்ய நம்மில் பலரும் , கிடைக்கும் வைபை இணைப்பில் இணைந்து சில மணி துளிகள் செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். சில மணி துளிகள் பயன்படுத்தக் கூடிய வைபை நமக்கு பேராபத்தை விளைவிக்கும் என நம்மில் பலரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு இலவச வைபை ஆபத்துக்களை அறியாதோர், அவற்றை பயன்படுத்தும் போது […]
மோட்டோரோலா நிறுவனமானது, மிக விரைவில் அதன் ஜி6 தொடரை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், மோட்டோ இசெட்3 பிளே(Moto Z3 Play) ஸ்மார்ட்போன் சார்ந்த 360 டிகிரி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான 360 டிகிரி வீடியோவில் காட்சிப்படும் மோட்டோ இசெட்3 ப்ளே ஆனது அதன் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் வெளிப்படுத்துகிறது. அதில் இருந்து, இசெட்3 ப்ளே ஆனது மோட்டோரோலாவின் பழைய ஸ்மார்ட்போன்களை விட முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை கொண்டிருக்கவில்லை என்பது புலப்படுகிறது. ஒரு மெல்லிய […]
விண்டோஸ் 7 க்கு பிறகு வெளிவந்த வெர்சன்களிலேயே விண்டோஸ்10 தான் மிகவும் பிரபலமாக உள்ளது. ஸ்டார்கவுண்டர் என்னும் வெப் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் கணிப்பு படி, விண்டோஸ்10 கணிணி உலகில் 42.78% உள்ள நிலையில் விண்டோஸ்7 வெறும் 41.86% தான் உள்ளது. விண்டோஸ்10 தான் கணிணி உலகின் தற்போதைய சூழ்நிலையில் நம்பர் 1 ஆகா திகழ்கிறது. 600 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ்10 இயங்கிவருவதாக கடந்த நவம்பர் மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. கணிணிகள், டேப்லெட், Xbox, ஹோலோலென்ஸ் ஹெட்செட் […]
உங்கள் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் சாதனங்களில் தற்செயலாக கோப்புகளை(File) நீக்குவது எளிது, ஆனால் திரும்ப அந்த கோப்புகளை மீட்பது மிகவும் கடினம் ஆனால் சில வழிமுறைகள் மூலம் நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை எடுக்க முடியும். ஆன்லைனில் பல்வேறு இலவச செயலிகள் உள்ளது அவற்றைப் பயன்படுத்தி கோப்புகளை எடுக்க முடியும். கரப்ட், ரேகோவேரி, ரீஃபார்மேட் செய்யப்பட்ட டிரைவ்கள் மூலம் அழிக்கப்பட்ட தரவுகள் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ், மெமரி கார்டு, எம்பி3 பிளேயர் என எந்த கருவியில் இருந்தாலும் அவைகளை […]
உங்கள் மொபைல்போனில் டேட்டாக்கள் இருந்தாலோ அல்லது உங்கள் மொபைல்போனில் உள்ள கேம்களை கம்ப்யூட்டர் டிஸ்ப்ளேயில் விளையாட முடிந்தாலோ, கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆன்ட்ராய்டு மொபைல்போனை கட்டுப்படுத்துவது] என அனைவரும் சிந்தித்திருப்போம். இந்நிலையில் உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் படிகளைக் குறித்து காண்போம். கம்ப்யூட்டரில் உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த உதவக் கூடிய ஒரு திரை பிரதிபலிப்பு அப்ளிகேஷனாக செயல்படும் வைஸர் என்று அழைக்கப்படும் ஒரு கருவியை நாம் பயன்படுத்த போகிறோம். மொபைல்போனில் உள்ள கேம்களை […]
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஆனது, சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருப்பதாக மக்கள் மற்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனாலும், மிகவும் குறைந்த அளவிலான உற்பத்தி மற்றும் அதிக விலை போன்ற சிக்கல்களால் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அனைவராலும் கைபற்ற முடியவில்லை. ஆப்பிள் ஐபோன்களை போன்றே ஒரு வரையறுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களாகவே கூகுள் பிக்சல் திகழ்கின்றன. அதனை மனதில் கொண்டு தான் – கூகுள் நிறுவனம் இந்தியர்களுக்கான ஒரு “குட் நியூஸை” அறிவித்துள்ளது. இந்தியா போன்ற ஸ்மார்ட்போன் சந்தைகளில், மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் […]
கடந்த 2012ம் ஆண்டு டெக்னாலஜி பற்றி செய்தி வெளியிடக்கூடிய இனணயதளம் ஒன்று ரேபாட்டிக்ஸ் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இதில் “ஆட்டோ பைலட்” என்ற தொழிற்நுட்பம் தான் 787 ஜெட் விமானத்தை இயக்குவதாக குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் வெளியாகும் ஒரு பத்திரிக்கையும் போயிங் ரக விமானங்களில் வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், ஏர்பஸ் ரக விமானங்களில் அதை விட குறைவான நேரங்களே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், மற்ற நேரங்களில் விமானங்கள் தானாகவே இயங்குவதாகவும் கூறியிருந்தது. […]
ஏப்ரல் முதல் டெல்லியில் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமே எரிபொருள் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது, ஆனால் டெல்லியில் பெருகி வரும் காற்று மாசுபாடு மற்றும் வாகன நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே BS6 தர எரிபொருளை மட்டுமே விற்பனை […]
இஸ்ரோ தலைவர் சிவன் இஸ்ரோ கட்டுப்பாடு மையத்துடனான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைகோளை மீண்டும் செயல்பட வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். எஸ் பேண்ட் வசதியுடன் கூடிய அதி நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட் 6ஏ செயற்கைகோளை கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் விண்ணில் இஸ்ரோ செலுத்தியது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் வெற்றிகரமாக […]
வாட்சாப் தகவல்களும் ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து, சாட்டிங் விவரங்களும் திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Chatwatch எனப்படும் செயலி மூலம், தங்களின் நண்பர்களின் வாட்சப் உரையாடல்கள் உட்பட, Offline, Online Status ஆகியவற்றையும், அவர்கள் எப்போது தூங்கச் செல்கிறார், எப்போது விழிக்கிறார் உட்பட அனைத்து விஷயங்களையும் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. Apple App Store -ல் இருந்து இந்தச் செயலி நீக்கப்பட்ட நிலையில், android play store ல் தற்போது கிடைக்கிறது. இந்த Chatwatch பிரச்சனையை முடிவுக்குக் […]
நள்ளிரவு முதல் மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு இ வே பில் முறை அமலுக்கு வந்தது.50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்ல மின்னணு ரசீது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதுக்கலை ஒழிக்கவும் வரி ஏய்ப்புகளைத் தடுக்கவும் சரக்குகளுக்கு இவே பில் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சரக்குகளுக்கான வரியை முன்கூட்டியே செலுத்தி ரசீது பெற்றால்தான் இனி பொருட்களை கொண்டு செல்ல முடியும். ஒரே மாநிலத்திற்குள் சரக்குகளைக் கொண்டு செல்லும் இ வே பில் […]