லெபனான் : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈரான் நாட்டின் பங்கு என்பது பெரிதளவு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஈரானில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்குகளையும் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டோடு எண்ணெய் தொடர்பாக இறக்குமதி செய்யும் நாடுகளில் கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறுகிறார்கள். அதிலும், குறிப்பாக பல மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, விலை […]
மியாசகி : இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜப்பான் மீது வலுவான விமானப்படை இருந்தும் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதனால், ஜப்பான் மீண்டு வருவதற்கு பல வருடங்கள் ஆனது. மேலும், இரண்டாவது உலகப்போர் சமயத்தில் ஜப்பான் அண்டை நாடுகளில் இருந்த ராணுவ தளத்திற்கு எளிதாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் கொண்டு செல்வதற்கு மியாசகி விமான நிலையம் மிகவும் உதவியாக இருந்தது. இதனால், அந்த தொடர்பை முற்றிலும் தடுப்பதற்கு அமெரிக்கா இந்த விமான நிலையம் மீதும் சரமாரியான குண்டுகளை அப்போது […]
லெபனான் : ஒரு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் தரப்பிலிருந்து இதற்குப் பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை கொடுத்திருந்தது. அதன்பிறகு, முதலில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியது. பின், அடுத்ததாகத் தரைவழி தாக்குதலையும் நடத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இந்த போரில் , […]
லெபனான் : இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவை தீர்த்துக்கட்ட போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என ஈரான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இஸ்ரேலிய தலைவர்களைத் தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தீவிரமானத் தொடர் தாக்குதலை நிறுத்தாமல் நடத்தி வருகிறது. இதனால், ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நேற்று முன்தினம் […]
ஈராக்: ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இஸ்ரேல் ஹெஸ்புல்லா தலைவரைக் கொன்ற பிறகு, மேலும் 100 சையது ஹசன் நஸ்ரல்லா பிறந்துள்ளதாக ஈராக்கின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த சில நாள்களாக அங்கு வான்வழி தாக்குதலை நடத்தி வந்த […]
லெபனான் : நேற்று முன்தினம் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என தெரிவித்த இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. முன்னதாக வான்வெளி தாக்குதலை தொடர்ந்த நிலையில், அடுத்ததாக தரைவழி தாக்குதலையும் தொடர்ந்தது. தற்போது, ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதில், மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் […]
லெபனான் : நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, ஈரானிலிருந்து சுமார் 1400 கி.மீ தொலைவிலிருந்து இஸ்ரேலின் 180 இடங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளால் (Iran ballistic missile) தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால், இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுப்போம் என அறிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் பிரதமரும், இஸ்ரேலின் ராணுவத் தளபதியும் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்கள். அதில், முக்கிய விஷயமாக ஈரான் தவறு செய்து விட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு கண்டிப்பாக எதிர்த்தாக்குதல் செய்வோம் […]
லெபனான் : கடந்த ஒரு வருடமாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமான் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இணைந்து இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் இதற்கு பதிலடியாக இஸ்ரேலை […]
மெக்ஸிகோ : கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளி சோதனைப் பயணமாக 9 நாள் பயணமாக சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஸ்டர்லைனர் விண்கலம் மூலம் புறப்பட்டனர். 9 நாட்களில் திரும்ப வேண்டிய நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 300 நாட்கள் ஆகியும் இதுவரை பூமிக்கு திரும்பவில்லை. இதனால், விண்வெளி மையத்திலேயே அவர்கள் பாதுகாப்பாக தங்கி வருகின்றனர். தற்போது, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வரும் சுனிதா வில்லியம்ஸுக்கு புதிதாக தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தியுள்ளனர். அதாவது, […]
பெய்ரூட் : லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது. அதன்படி, லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல். இந்த ராணுவ தாக்குதலுக்கு ‘Operation Northern Arrows’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. லெபனான் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் சரியான பதிலடி தர, தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவர் காஸிம் கூறி உள்ளார். காசாவில் […]
லெபனான் : இஸ்ரேல் ராணுவமானது பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பு மீது தொடர் தாக்குதலை நடத்தி வருவது போல, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான சயீத் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாடுகள் குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரேலுக்கு சற்று அதிர்ச்சி […]
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உயிரிழந்த பிறகு, ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹசன் கலீல் யாசின் நேற்று அறிவிக்கப்பட்டார். அவர், தலைவராக அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ITF தனது எக்ஸ் பதிவில், தங்களது தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பாதுகாப்பு பிரிவு தளபதியும், நிர்வாகக் குழு உறுப்பினருமான நபில் கவுக் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து லெபனான் மீது, இஸ்ரேல் […]
அமெரிக்கா : நாளை முதல் வானில் 2 நிலவுகள் தெரியும் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும் கண்ணால் நம்மால் பார்க்க முடியாது என்றும், வானில் உள்ள கோள்களை பார்க்க பயன்படுத்தப்படும் சிறப்பு தொலைநோக்கிகள் கொண்டு பார்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது, வானில் நிறைய விண்கற்கள் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் சுழன்றுகொண்டு இருக்கின்றன. அதில் ஏதேனும் ஒரு விண்கல் அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் கட்டுப்பட்டு சில நாட்கள் புவி […]
லெபனான் : இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில்,ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகம் தரைமட்டமானது. அப்போது அந்த அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா அந்த தாக்குதலுக்கு உயிரிழந்தார் என இஸ்ரேலின் பல ஊடகங்கள் தெரிவித்தது. அப்போது ஈரானின் டஸ்நிம் ஏஜென்சி தலைவர் நஸ்ரல்லா பாதுகாப்பாக இருக்கிறார் என தெரிவித்தனர். அதன் பின் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. […]
லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர்-7 ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்ப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் இரான் ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பை தாக்கி வந்தது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொள்ளப்பட்ட்டனர். மேலும், மாறி மாறி நடைபெற்று வரும் தாக்குதலில் இதுவரை அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், 21 நாள் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென […]
அமெரிக்கா : முன்பை விட சமீப காலத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் தற்போது மிக மோசமான நிலைமைக்கு அது சென்று விட்டது. குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த 2024-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது […]
லெபனான் : இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே கடந்த ஒரு வருடகாலமாக தீராப்பகை முற்றி வருகிறது. அதிலும், லெபானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடுமையான தாக்குதல் என்பது நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 1500க்கும் மேற்படூர் காயம் அடைந்தனர், பலரது நிலைக் கவலைக் கிடமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய […]
லெபனான் : இஸ்ரேல் நேற்று லெபனான் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த தளபதி இப்ராகிம் முகமது கோபிசி தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது, அதனை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லெபனான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த முக்கிய தளபதியான இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அவரை தொடர்ந்து அடுத்ததாக ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த முக்கிய […]
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார். இந்நிலையில், அந்நாட்டு இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் கட்சியின் எம்.பி. ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில்ஹரிணி அமரசூரியவுக்கு, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய, நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், […]
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலை தாக்கியுள்ளனர். இஸ்ரேலின் ராணுவ விமானப்படை இடங்களை குறிவைத்தே இந்த ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகள் அமைந்துள்ள தெற்கு […]