இஸ்ரேல் : கடந்த ஆண்டு அக்டொபேர்-7 ம் தேதி தொடங்கிய, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தற்போது வரை முடிவுக்கு வராமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த தாக்குதலில் இது வரை ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்படி நடைபெற்று வரும் போரில் ஹமாஸ்ஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஹசன் நஸ்ரல்லாவின் உயிரிழப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், ஹிஸ்புல்லா, […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் -5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக இரு கட்சியினரும் செய்து வருகின்றனர். இதில், ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருப்பதாகவும், அடுத்த அமெரிக்க அதிபர் அவர் தான் எனவும் கருத்துக் கணிப்புகளில் கூறப்படுகிறது. இந்த வேளையில், அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பை 3-வது முறையாக கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இன்று கோசெல்லாவில் நடந்த […]
அமெரிக்கா: மனிதனைப் போலவே செயல்படும் ஒரு ரோபோவை உருவாக்குவதற்கு மிக அருகில் வந்துவிட்டான் மனிதன். ஆம், அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க் மனிதர்களைப் போலவே நடக்கவும் பேசவும் கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ‘We, Robot’ நிகழ்ச்சியில் டெஸ்லாவின் மனித உருவ ‘ஆப்டிமஸ்’ ரோபோக்களை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த ரோபோ உங்கள் குழந்தைகளைப் பராமரிப்பது, புல்வெளி வெட்டுவது, பானங்கள் வழங்குவது என நீங்கள் எதைச் செய்ய […]
காசா : கடந்த ஆண்டில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்ட்டனர், பல இடங்கள் இஸ்ரேலில் நாசமானது. மேலும், ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு சிலர் போர் நிறுத்த அடிப்படையில் மீட்கப்பட்டாலும், மீதம் இருக்கும் மக்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஒரு ஆண்டை கடந்து நடந்து வரும் இந்த போரில் மட்டும் சுமார் 42,000 […]
பிரேசில் : கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், வெற்றி பெற்ற லுலா டா சில்வா ஜனாதிபதியாக வெற்றிபெறுவதை தடுக்க எதிர்த்து போட்டியிட்ட போல்சனாரோ, சதிச்செயலில் ஈடுபட்டாரா? என பிரேசில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதே வேளை,ஏற்கனவே மூடப்பட்டிருந்த பல்வேறு போலியான எக்ஸ் கணுக்குகளை எலான் மஸ்க் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார் எனும் குற்றச்சாட்டை பிரேசிலின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான […]
ஸ்டாக்ஹோம் : இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் பாதியை அமெரிக்காவின் டேவிட் பேக்கருக்கும், இரண்டாவது பாதியை டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்ப்பர் ஆகியோருக்கு வழங்கியும் நோபல் அகாடமி முடிவு செய்துள்ளது. அதில், “கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக” டேவிட் பேக்கருக்கும், “புரத அமைப்பு கணிப்புக்காக” டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் என மூவருக்கும் இந்த முறை வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் […]
டெல் அவிவ் : கடந்த ஒருவருடமாக ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து ஒரு புறம் காசா மறுபுறம் ஹமாஸ் மற்றும் மறுபுறம் ஹிஸ்புல்லா என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அதில், நாளுக்கு நாள் இஸ்ரேல் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலைத் தீவிரப் படுத்தி வருகிறது. இப்படி போர் நடைபெற்று வரும் வேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்தது. அதன் விளைவாக, ஹிஸ்புல்லா […]
லண்டன் : மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட், ஒரு பெண்ணை காதலிப்பதை நாம் எந்திரன் படத்தில் பார்த்திருக்கிறோம். அது கற்பனை கதைக்கும், சினிமாவிற்கும் ஸ்வாரஸ்யமாக இருந்தாலும் அது நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆனால், நம்மை சுற்றிலும் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு இருப்பதால், அந்த கதைகளும் கூட நிஜத்தில் நடப்பதற்கான அபாயம் தற்போது வந்துவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், செயற்கை நுண்ணறிவு அதாவது AI […]
அமெரிக்கா : இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எனவே, நேற்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவைக் குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றது. அதைப்போல, இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கும் அமெரிக்காவிலும் இரங்கல் கூட்டம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரத்தை ஒதிக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சில விஷயங்களை வெளிப்படையாக பேசினார். அதில் அவர் பேசியதாவது, “கடந்த […]
இஸ்ரேல் : ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் ஹமாஸ், இஸ்ரேலின் மக்கள் சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். அதன்பின், போர் நிறுத்த அடிப்படையில் சிலரை ஹமாஸ் விடுவித்தாலும், மீதம் உள்ள பணயக்கைதிகளை மீட்கும் போராட்டத்தில் இஸ்ரேல் தற்போது இருந்து வருகிறது. இப்படி தொடங்கிய இந்த தாக்குதல், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான தாக்குதலாக மாறி இருக்கிறது. நேற்றுடன் (அக்-7) இந்த தாக்குதல் தொடங்கி ஒரு வருடம் […]
ஹைஃபா : கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் (அக்-7) ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதலை மேற்கொண்டனர். அதில், பலரையும் பணயக்கைதிகளாக பிடித்தும் சென்றனர், அவர்களை மீட்கும் பணியிலே தற்போது வரை ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா மீது காசா பகுதியில் இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கி 1 வருடம் இன்றுடன் நிறைவடைந்த இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் ஒருமுனையில் நடைபெற்று வந்த போது மறுமுனையில் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலை தாக்கினார்கள். […]
அமெரிக்கா : அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மாஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட எலான் மஸ்க் ட்வீட்டர் பக்கத்தின் ஸ்பேசில் எலான் மஸ்க்கை நேரடியாகப் பேட்டியெடுத்து அவருக்கு ஆதரவு […]
லெபனான் : கடந்த அக்-7 2023-ம் ஆண்டு, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நுழைந்து கொடூர தாக்குதலை நடத்தினார்கள். அதில், ஆயிரக்கணக்கானோரை கொன்றதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து சென்றது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்துவதற்காக இஸ்ரேல், காசா மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில், போர் நிறுத்த அடிப்படையில் இஸ்ரேல் சிலரை மீட்டது. ஆனால், மீதம் உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் தற்போது இஸ்ரேல் ஈடுபட்டு, தாக்குதலை தொடர்ந்து வருகிறது. மேலும், […]
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதில் அந்த நகரங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன. இந்த நிலையில், லெபனான் தலைநகரில் ஹெஸ்பொல்லா தலைவர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள், நேற்று (வெள்ளிக்கிழமை) தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டதாகக் […]
லெபனான் : இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய மோசமான தாக்குதலில், 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல், கடுமையாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தனை பேர் உயிரிழந்த நிலையிலும் கூட லெபனான் மீதான தாக்குதலைத் தொடருவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டொனால்ட் […]
இஸ்ரேல் : வடக்கு லெபனானின் திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் உயர் பதவியில் இருந்த சயீத் அட்டாலா அலி கொல்லப்பட்டார். மேலும், இந்த தாக்குதலில் அலியின் குடும்ப உறுப்பினர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், விடாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு […]
லெபனான் : இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சரியாக சொன்னால் வரும் செப் -7 தேதி (திங்கள்கிழமை) வந்தால் ஒரு வருடம் நிறைவடைந்து விடும். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இந்த தாக்குதலில் மட்டும் சுமார் 42, 000 உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆதரவாக இரான் சமீபத்தில் களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதவராக மத்திய கிழக்கில் உள்ள […]
ஈராக் : சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து இஸ்லாமிய அரசு (ISIS) கடத்திச் செல்லப்பட்ட 21 வயதுடைய இளம்பெண்ணை காசாவில் இருந்து ஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளும் அந்த பெண்ணை மீட்ட வீடியோக்களை வெளியிட்டன. பின்னர், அந்த இளம் பெண் ஈராக்கின் யாசிதி சமூகத்தைச் சேர்ந்த ஃபௌசியா சிடோ என அடையாளம் காணப்பட்டார். ஃபௌசியா சிடோ (Fauzia Sido) என்ற இந்த பெண் சுமார் […]
கர்பல்லா : 1 ஆண்டுகளுக்கு மேல் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல, இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் மரணம் நிச்சயம் என எச்சரிக்கும் வகையில் ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கூறியுள்ளார். கடந்த செப்-27ம் தேதி இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து நடத்திய வான்வெளி […]
பெய்ரூட் : இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். அதனால், இன்று அவருக்கு மத்திய பெய்ரூட்டில் உள்ள கர்பல்லாவில் அவருக்கு அடையாள இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இருந்த சண்டையானது அதன் பின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்குமான போராக உருவெடுத்தது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலும் அளிப்போம் […]