அஷ்வினின் ‘கன்னி’ பேச்சு தியேட்டர்காரர்களை கதிகலங்க வைத்துள்ளதாம்.!?

Published by
மணிகண்டன்

என்ன சொல்ல போகிறாய் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்வினின் முதல் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையானதால், விநோயோகிஸ்தர்கள் கலக்கமடைந்துள்ளனராம்.

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தின் பேசு பொருள் நம்ம குக் வித் கோமாளி அஸ்வின் தான். அந்தளவுக்கு வைச்சு செய்து கொண்டிருக்கின்றனர். இதெற்கெல்லாம் காரணம் அவர் நடித்துள்ள முதல் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் அறியாமல் பேசிய கன்னி (முதல்) பேச்சுதான்.

அஸ்வின் நடிப்பில் முதன் முதலாக தயாராகி வரும் திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். இந்த திரைப்படத்தை ஹரிஹரன் எனும் புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அஸ்வின், ‘ எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. கதை பிடிக்கலைன்னா தூங்கிடுவேன். நான் 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன். என்னை முழிக்க வைத்த ஒரே கதை இது தான். ‘என அவர் பேசியது பெரும் சர்ச்சையானது. இணைய வாசிகளுக்கு பெரும் தீனியாக அமைந்துவிட்டது. அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து, எனக்கு இதற்கு முன்னர் மேடை பேச்சு பேசியதில்லை என்பதால், பேசிவிட்டேன் என்பது போல கூறிவிட்டார். இருந்தும் நெட்டிசன்கள் விடுவதாயில்லை.

இந்த விஷயத்தை பார்த்த தியேட்டர் அதிபர்கள், விநோயோகிஸ்தர்கள் அதிர்ந்து போய்விட்டனர். அவர்கள் குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் முதல் படம் என்பதால், இளைஞர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருக்கும் என நம்பி முக்கூட்டியே நல்ல விலை பேசி அட்வான்ஸ் வரை கொடுத்துவிட்டனராம்.

ஆனால், தற்போது அஸ்வினை வைச்சி செய்வதே அதே இளைஞர் கூட்டம் என்பதால், தியேட்டருக்கு கூட்டம் வருமா என அதிர்ந்து, தயாரிப்பு தரப்பிடம் படத்தை விலையை குறைக்க சொல்லி வற்புறுத்தி வருகிறார்களாம்.

என்ன சொல்ல போகிறாய் அஸ்வினுக்கு கோலிவுட் ரசிகர்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்களோ? இனி வரும் காலங்களிலாவது பாத்து சூதானமாக நடந்துக்கோங்க அஸ்வின் என இணையத்தில் பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

27 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

2 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

2 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

3 hours ago