GoatTrailer out now
சென்னை : ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் ஆக 17 வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து டிரைலர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளை போல இருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. விஜய் பேசும் வசனங்கள் அத்துடன் வரும் பின்னணி இசை என அனைத்தும் காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
இதற்கு முன்னதாக படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்களில் விஜயின் லுக் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், டிரைலரில் அனைவரையும் கவரும் வகையில் ரெடி செய்து வெங்கட் பிரபு எதிர்மறையான விமர்சனங்களுக்கு சரியன பதிலடி கொடுத்துள்ளார். அதைப்போலவே, கோட் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகும்போதும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது விமர்சனங்கள் எழுந்தது.
அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக, கோட் டிரைலரில் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா காட்சிகளுக்கு பக்க பலமான இசையை கொடுத்துள்ளார். டிரைலரை பார்த்துவிட்டு அவருடைய இசையையும் பாராட்டி வருகிறார்கள். மொத்தமாகவே, கோட் டிரைலரில் பெரிய அளவில் குறைகள் இல்லை என்பதால் படத்திற்கு தான் அடுத்த வெயிட்டிங் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…