அபிதாபியிக்கு விடை கொடுத்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

Published by
கெளதம்

சென்னை : ஐக்கிய அரபு அமீரகத்தில் 11 நாட்கள் ஓய்வுக்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் ஷூட்டிங் இம்மாத தொடக்கத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சில நாள்கள் ஓய்வெடுக்க ரஜினி அபுதாபி சென்றிருந்தார்.

அங்கு அவர், கோயிலுக்குச் சென்று வழிபட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. மேலும், அங்கு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது ஐக்கிய அரபு அமீரக அரசு.  இந்நிலையில் ‘கூலி’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினி இன்று காலை சென்னை திரும்பினார்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரஜினி தனது காரில் ஏறுவதற்கு வரும் வழியில், பெண் ரசிகை ஒருவர் அவரை மறைத்து வணக்கம் வைப்பார். அதனை மதித்து ரஜினியும் வணக்கம் செய்திருப்பார். இது அவரது ரசிகர்களை நெகிழ செய்துள்ளது.

இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘கூலி’. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

10 minutes ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

30 minutes ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

2 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

2 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago

“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?”- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!

சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…

3 hours ago