சென்னை, பெருங்குடியில் அவரவர் பட ஷூட்டிங் நடைபெற்றபோது நடிகர் சூர்யாவும். விஜயும் சந்தித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருப்பவர்கள் தளபதி விஜயும், சூர்யாவும். இருவரும் திரைக்கு வந்த புதிதில் இருந்தே நல்ல நண்பர்கள். சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தில் இன்னோர் முதன்மை நாயகனாக தளபதி விஜயும் நடித்திருப்பார்.
இருவரும் நேரம் கிடைக்கும் போது சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை, பெருங்குடியில் விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதே வேளையில், சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.
இதனை அறிந்த இருவரும் இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த சந்திப்பின் போது எந்த வித போட்டோக்களும் எடுக்கப்படவில்லையாம். அப்படி எடுத்திருந்தால், அது அவர்களின் கெட்டப் கசிய வாய்ப்பிருக்கிறது என்பதால் எடுக்காமல் விட்டுவிட்டார்களா? அல்லது, போட்டோ எடுத்துவிட்டு, படம் ரிலீஸ் ஆனதும் ரிலீஸ் செய்துவிடலாம் என வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…