அந்த விஷயத்தை நான் ரொம்பவே மிஸ் பண்றேன்! நடிகை சிம்ரன் வேதனை!

Published by
பால முருகன்

Simran : நான் நடனத்தை ரொம்பவே மிஸ் பண்றேன் என நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.

சிம்ரன் என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். ஆல்தோட்ட பூபதி, தொட்டு தொட்டு சுல்தான் பாடலில் அவர் ஆடிய நடனம் எல்லாம் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கன்னியாக வளம் வந்த நடிகைகளில் சிம்ரனும் ஒருவர்.

இப்போது வயதானாலும் கூட அவர் தொடர்ச்சியாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்து கொண்டு வருகிறார்.  இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சிம்ரன் தான் மிகவும் மிஸ் செய்யும் விஷயம் குறித்த தகவலை பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய நடிகை சிம்ரன் ” நான் இப்போது அதிகமாக மிஸ் செய்வது என்றால் நடனத்தை தான் மிஸ் செய்கிறேன்.

அதைப்போல ஆரம்ப காலத்தை போல இல்லாமல் இப்போது பாடல்கள் வேறு மாதிரி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இருப்பது போல பாடல்கள் இப்போது நான் மிஸ் செய்கிறேன். எனக்கு பாடல்களில் நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும். இப்போதெல்லாம் சோஷியல் மீடியா, ஓடிடி நிறைய வந்துவிட்டது. எனவே, நடனம் ஆடினால் நல்ல ரீச் கிடைக்கிறது. இப்போது நான் நடனம் ஆடுவதை மிஸ் செய்கிறேன்” என நடிகை சிம்ரன் வேதனையுடன் பேசியுள்ளார்.

மேலும் நடிகை சிம்ரன் தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடி உள்ளார். அவர் நடனம் ஆடி இருக்கும் அந்த பாடல் படத்தின் ப்ரோமோஷன் பாடலாக இருக்கலாம் எனவும், படத்தினுடைய கடைசி காட்சியில் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago