Categories: சினிமா

18 ஆண்டுகளுக்கு பிறகு எனது வழிகாட்டி இதை கூறுகிறார்.! சூர்யா நெகிழ்ச்சி பதிவு.!

Published by
பால முருகன்

நடிகர் சூர்யா மற்றும், இயக்குனர் பாலா கூட்டணியில், வெளியான நந்தா, பிதாமகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இவர்களது கூட்டணி அடுத்ததாக எப்போது இணையும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

இவர்களது காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில், நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில், பாலாவுடன் தான் மீண்டும் இணைவதாக அறிவித்திருந்தார். ஆனால் இசையமைப்பாளர் நடிகை யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில். தற்போது அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இணைந்த இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 41 – என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சூர்யாவின் 2 D நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் இசையமைப்பதாகவும், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும், ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் கன்னியாகுமாரியில் தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாலாவுடன் 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா இணைவதால் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அதில் ” எனது வழிகாட்டியான இயக்குனர் பாலா ஆக்சன் சொல்வதற்காகக் காத்திருந்தேன்… 18 வருடங்களுக்குப் பிறகு இன்று நடந்துள்ளது மகிழ்ச்சி…உங்களுடைய எல்லா விருப்பங்களும் எங்களுக்கு தேவை” என பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

27 minutes ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

3 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

4 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

4 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

7 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago