ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு பின் மறுத்த விஜயகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

Published by
பால முருகன்

Vijayakanth : ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு படத்தில் இருந்து விஜயகாந்த் விலகி உள்ளாராம்.

கேப்டன் விஜயகாந்த் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் இருந்தே அதிரடியான ஆக்சன் கலந்த படங்களில் மட்டுமே நடித்து மக்களை கவர்ந்து வந்தார். ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட வில்லன் கதாபாத்திரத்தில் பெரிதாக நடித்தது இல்லை. ஒரு முறை ரஜினிக்கு வில்லனாக நடிக்க  வாய்ப்பு வந்தபோது அதில் நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு விலகினாராம்.

அந்த படம் வேறு எந்த படமும் இல்லை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன முரட்டுக்காளை படம் தான். இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முதலில் விஜயகாந்திடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அந்த சமயம் விஜயகாந்த் பட வாய்ப்புகளே இல்லை என்பதால் இந்த படத்தில் நடிக்கலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் விஜயகாந்தை சந்தித்து படத்தை பற்றி பேசிவிட்டு சம்பளமாக உங்களுக்கு 1 லட்சம் தருகிறோம். அதற்கான அட்வான்ஸ் தொகையாக 25,000 இப்போது வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார்களாம். உடனடியாக விஜயகாந்தும் சம்மதம் தெரிவித்துவிட்டு வாங்கினாராம்.

இந்த தகவல் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ராவுத்தருக்கு தெரிய வந்துவிட்டதாம். உடனடியாக ராவுத்தர் விஜயகாந்திற்கு கால் செய்து எதற்காக நீ முரட்டுக்காளை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாய் நீ நடித்தால் ஒரு படத்தில் ஹீரோவாக தான் நடிக்கவேண்டும். அது தான் சரியாக இருக்கும். இந்த படத்தில் நீ வில்லனாக நடித்தால் அடுத்ததாக உனக்கு வரும் பட வாய்ப்புகள் எல்லாம் வில்லன் கதாபாத்திரமாக வரும். முதலில், வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டு வா என்று கூறிவிட்டாராம். உடனடியாக விஜயகாந்தும் கொடுத்துவிட்டு படத்தில் நடிக்கவில்லை என்று விலகிவிட்டாராம். இந்த தகவலை மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

16 minutes ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

1 hour ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

1 hour ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

2 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

3 hours ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

4 hours ago