சினிமா

அந்த இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்! சம்பளம் எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!

Published by
பால முருகன்

அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குனருமான ஆதிக் ரவிசந்திரன் அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இவர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில்நடித்திருந்தார் . இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறாராம். தற்போது அந்த படத்திற்கான வேளைகளில் தான் தீவிரமாக இறங்கியும் இருக்கிறாராம். ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்ய போவதாக செய்திகள் வெளியானது.

ஆனால், அஜித் அடுத்ததடுத்த சில படங்களில் நடிக்க ஆரம்பித்த காரணத்தால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இந்த நிலையில், மார்க் ஆண்டனி எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்துள்ள நிலையில், அஜித் அவரிடம் வேறொரு கதையை கேட்டு அந்த கதை பிடித்துப்போக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இவர்கள் இருவரும் இணையும் இந்த திரைப்படத்தை ஆர்எஸ்இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் விடுதலை திரைப்படத்தை தயாரித்த கீழ் எல்ரெட் குமார் தயாரிக்கவிருக்கிறாராம். இதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தமிழ் திரையுலகை அதிர வைக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித்திற்கு பேசப்பட்ட சம்பளம் தான். அப்படி எவ்வளவு சம்பளம் என்றால் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அவர் சம்பளமாக 150 கோடி கேட்டுள்ளராம். அதற்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதத்தை தெரிவித்து ஒற்றுக்கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தான் தொடங்கி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அஜித் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலையும் அவருக்கு 150 கோடி சம்பளம் கொடுக்கப்படவுள்ள தகவலையும் பிரபல யூடியூப் சேனல் வலைபேச்சு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

9 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

10 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago