சினிமா

அந்த இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்! சம்பளம் எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!

Published by
பால முருகன்

அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குனருமான ஆதிக் ரவிசந்திரன் அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இவர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில்நடித்திருந்தார் . இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறாராம். தற்போது அந்த படத்திற்கான வேளைகளில் தான் தீவிரமாக இறங்கியும் இருக்கிறாராம். ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்ய போவதாக செய்திகள் வெளியானது.

ஆனால், அஜித் அடுத்ததடுத்த சில படங்களில் நடிக்க ஆரம்பித்த காரணத்தால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இந்த நிலையில், மார்க் ஆண்டனி எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்துள்ள நிலையில், அஜித் அவரிடம் வேறொரு கதையை கேட்டு அந்த கதை பிடித்துப்போக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இவர்கள் இருவரும் இணையும் இந்த திரைப்படத்தை ஆர்எஸ்இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் விடுதலை திரைப்படத்தை தயாரித்த கீழ் எல்ரெட் குமார் தயாரிக்கவிருக்கிறாராம். இதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தமிழ் திரையுலகை அதிர வைக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித்திற்கு பேசப்பட்ட சம்பளம் தான். அப்படி எவ்வளவு சம்பளம் என்றால் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அவர் சம்பளமாக 150 கோடி கேட்டுள்ளராம். அதற்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதத்தை தெரிவித்து ஒற்றுக்கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தான் தொடங்கி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அஜித் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலையும் அவருக்கு 150 கோடி சம்பளம் கொடுக்கப்படவுள்ள தகவலையும் பிரபல யூடியூப் சேனல் வலைபேச்சு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago