atlee
சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்து இயக்குநர் அட்லீ செய்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன், விஜய் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் சுதந்திர தின விழா பற்றி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அவர்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்த மகாத்மா காந்தியின் வரிகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” என்று ஒரு பெண் இரவில் சுதந்திரமாக சாலையில் நடக்க முடிகிறதோ, அன்றே இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லலாம்” என ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அவருடைய அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கடந்த (ஜூலை-9) அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவனமயில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சம்பவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு தான் இயக்குனர் அட்லீ இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பதிவிட்டு இருக்கிறார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…