சுசித்ரா ஒரு பைத்தியக்கார கிரிமினல்! விளாசிய பயில்வான் ரங்கநாதன்!!

Published by
பால முருகன்

சென்னை : பாடகி சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா பெயர் தான் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது பேசிய விஷயங்கள் தான். பயில்வான் ரங்கநாதன், தனுஷ், கார்த்திக் குமார், த்ரிஷா என பிரபலங்களை பற்றி பேசியது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பற்றி சுசித்ரா ” நான் ஹோட்டல் ரூமில் இருந்தேன் என்று என்னை பற்றி பயில்வான் ரங்கநாதன் தவறாக பல விஷயங்களை சொன்னார். இவரெல்லாம் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும்ஏஜெண் வேலையை செய்து கொண்டு இருந்தவர். அவர் சீக்கிரமே சாகவேண்டும். அவருடைய சாவு எப்படி இருக்கணும் தெரியுமா, எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டு, நடுரோட்டில் கதறி அழுது தினம் சாகணும்” என்று ஆதங்கத்துடன் வெளிப்படையாகவே சுசித்ரா  பேசினார்.

இந்த நிலையில், சுசித்ரா தன்னை பற்றி பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” சுசித்ரா பைத்தியக்கார கிரிமினல் தானமாக பேசி கொண்டு இருக்கிறார். அவர் பேசுவதை பார்க்கும்போது மனநிலை நோயாளி போல தெரிகிறது.

ஆரம்பத்தில் என்னை பற்றி தவறாக பேசவேண்டியது பிறகு கடைசியில் என்னை பற்றி உயர்வாக பேசவேண்டியது. இப்படியெல்லாம் பேசுவது மன நோயாளி பேச்சு தானே? சுசித்ரா மீது சில புகார்கள் வந்த காரணத்தாலும், அவருடைய நடவடிக்கை சரியாக இல்லை என்ற காரணத்தாலும், கார்த்திக்குமார் ரொம்பவே அவரை திருத்த முயற்சி செய்தார்.

முயற்சி செய்தும் முடியவில்லை என்ற காரணத்தால் தான் கார்த்திக்குமார் சுசித்ராவை விவாகரத்து செய்தார். சுசித்ராவை பொறுத்தவரையில் அவர் மன நோயாளி தான். அப்படி கூறி தான் ஒரு வழக்கில் இருந்து கூட வந்தார். விவாகரத்து செய்த பிறகு தனது முன்னாள் கணவன் பற்றி பேசுவது சட்டப்படி குற்றம். ஆனால், அது கூட தெரியாமல் சுசித்ரா பேசிக்கொண்டு இருக்கிறார்.  அவர் பேசிய பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாமே சட்டத்திற்கு விரோதமானது” என்றும் சுசித்ராவை விமர்சித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

13 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

14 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

15 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

16 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

17 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

18 hours ago