சினிமா

“வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!

Published by
பால முருகன்

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விவாகரத்து முடிவு அறிவித்ததைத் தொடர்ந்து மனைவி ஆர்த்தி தன்னை வீட்டுப் பணியாட்களை விட மோசமாக நடத்தினார் எனவும் குற்றம்சாட்டி ஜெயம் ரவி பேசினார்.

அத்துடன், ஜெயம் ரவி நடித்துச் சம்பாதித்த பணத்தை மனைவி ஆர்த்தி செலவழிப்பதாகவும், ஆனால், நான் ஏதாவது வாங்கினால், நான் ஏன் அதைச் செய்தேன் என்று என்னிடம் சண்டையிடுவாள். ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து மூன்று படங்களைத் தயாரித்திருந்தாலும், அதிலிருந்து தனக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

Read More- “குடும்பத்துல கால் வச்ச முதல் ஆண் ஜெயம் ரவி தான்”…ஆர்த்தி அம்மா எமோஷனல்!!

ஜெயம் ரவி கூறிய வேதனை கதையைப் பார்த்த ரசிகர்கள் சந்தோசம் இல்லாத சுப்ரமணியமாவே வாழ்ந்து இருக்கிறார் மனுசன் எனக் கூறி அனைத்து பிரச்சினைகளும் ஒரு நாள் மாறும் எனக் கூறி வருகிறார்கள். இந்த சூழலில், ஜெயம் ரவி இன்னுமே வேதனைப்பட்டு விஷயம் குறித்த ஒரு தகவலும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.

அது என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் ரவி வாட்ஸ்அப் பயன்படுத்திக்கொண்டு இருந்தாராம். அப்போது யார் மெசேஜ் அனுப்பினாலும் முதலில், ஆரத்தி அவருடைய போனை வாங்கி யார் மெசேஜ் செய்திருக்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு அதன் பிறகு, தான் ஜெயம் ரவியிடம் கொடுப்பாராம். வாட்ஸ்அப்பில் மட்டும் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்ட் கூட ஆர்த்தியின் கட்டுப்பாட்டில் தான் இருக்குமாம்.

அடிக்கடி, ஜெயம் ரவி கணக்கிலிருந்து அவருடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகும். அந்த புகைப்படங்களை ஜெயம் ரவி கணக்கிலிருந்து ஆர்த்தி தான் வெளியிடுவாராம். இதனால் பல சமயங்களில் ஜெயம் ரவி கண்கலங்கி அழுதிருக்கிறாராம். எனவே, தன்னை மதிக்காத காரணத்தாலும், தனக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்காத காரணத்தாலும் ஜெயம் ரவி இப்படியான முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Read More – ஆர்த்தியுடன் விவாகரத்து முடிவு! மும்பையில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

ஏற்கனவே, ஜெயம் ரவி தன்னுடைய வேதனை கதையைக் கூறியிருந்த நிலையில், இப்படியான தகவல் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இன்னும் என்னென்ன, தகவல் எல்லாம் வெளியாக போகிறதோ என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

6 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

8 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago