முயற்சி பண்ணேன் முடியல! மங்காத்தா ரீ-ரிலீஸ் பற்றி உண்மையை உடைத்த வெங்கட் பிரபு!

Published by
பால முருகன்

Mankatha Re Release : மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், ஏப்ரல் 20-ஆம் தேதி கூட விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் மங்காத்தா படத்தை ரீ -ரிலீஸ் செய்யவேண்டும் என்று கேட்டு கொண்டே வந்தார்கள்.

மங்காத்தா படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் படம் ரீ-ரிலீஸ் ஆகவில்லை. எனவே, தமிழ்நாட்டில் இருக்கும் அஜித் ரசிகர்கள் பலரும் இன்னும் வரை அஜித் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என சமூக வலைத்தளங்களில் கேட்டு கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் எக்ஸ் வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் இயக்குனர் வெங்கட் பிரபுவை டேக் செய்து மே 1-ஆம் தேதி மங்காத்தா படத்தை எப்படியாவது ரீ-ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள் என்று கேட்டு இருந்தார். ரசிகரின் அந்த கேள்விக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு ” என்னால் முடிந்தவரை அதற்கான முயற்சிகளை செய்தேன். ஆனால், உரிமை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனத்திடம் இருக்கிறது எனவே அவர்கள் தான் அதற்கான வேலைகளை தொடங்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

மங்காத்தா படத்தை சன் பிக்சர்ஸ் திரையரங்கு உரிமையைப் பெற்றது மற்றும் ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸ் மூலம் படத்தை விநியோகம் செய்தது. எனவே, சன் பிக்சர்ஸ்  நிறுவனம் நினைத்தால் மட்டும் தான் மங்காத்தா படத்தை தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்ய முடியும். வரும் நாட்களில் அதற்கான முயற்சிகளை எடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் தீனா, பில்லா ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

8 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

8 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

9 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

9 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

12 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago