சாதி கொலைகளை தடுக்க மாற்றம் தேவை – மாரி செல்வராஜ் பேச்சு!

Published by
பால முருகன்

மாரி செல்வராஜ்: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் மாரி செல்வராஜ் தனக்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது சாதி கொலைகளை தடுக்க அனைவரும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

இது குறித்து பேசிய மாரிசெல்வராஜ் ” அடிப்டையாகவே நிறைய மாற்றங்கள் என்பது இப்போது தேவைப்படுகிறது. இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். உடனே இது போன்ற சம்பவங்களை தடுத்தி நிறுத்தி மாற்ற முடியாது. காலம் காலமாக மனதிற்குள் ஆழமாக தங்கி ஒரு விஷயமாக இது இருக்கிறது.

எனவே, ரொம்பவே கஷ்டப்பட்டு தான் இதனை எல்லாம் மாற்ற வேண்டும். உடனே ஒரு நாளில் மாற்ற முடியும் சூழலில் இல்லை. ஏனென்றால், இது உளவியலாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாம் சாதாரணமாக சொல்கிறோம் ஒரு சட்டம் போட்டால் சுலபமாக மாற்றலாம் என்று. ஆனால், அது முடியாது. உளவியல் ரீதியாக அனைத்து பொதுமக்கள் மனதிலும் சாதி உள்ளது. எல்லாரும் சேர்ந்து நுணுக்கமாக அரசியல் எல்லாம் சேர்ந்து அழுத்தமான ஒரு வேலையை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கு.

அப்படி செய்தால் மட்டும் தான் அடுத்த தலைமுறை ஒரு புரிதலுக்கு உண்டாகும்” எனவும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து ஓடிடி தளங்களில் படம் வெளியாவது பற்றியும் பேசிய மாரி செல்வராஜ் ” ஓடிடி தளங்களில் படம் வருகிறது என்பதால் தியேட்டருக்கு மக்கள் வரும் எண்ணிக்கை குறையவே குறையாது. ஒரு வீட்டிற்குள் பூஜை அறை இருக்கிறது. எனவே, பூஜை அறை இருப்பதால் யாரும் கோவிலுக்கு செல்லாமல் இருக்கப்போவது இல்லை. அதைப்போல தான் எப்போதுமே மக்கள் திரையரங்குகளுக்கு வந்துகொண்டு தான் இருப்பார்கள்” எனவும் இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

8 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

8 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

9 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

9 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

12 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago