யோகி பாபு : தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. காமெடி நடிகர்களாக கலக்கி கொண்டு இருந்த சந்தானம், சூரி, ஆகியோர் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதால் யோகி பாபுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது யோகி பாபு, கோட், இந்தியன் 2, காதலிக்க நேரமில்லை, உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.
தொடர்ச்சியாக இதனை தவிரவும் பல படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார். சம்பள விஷயத்திலும் கூட அவர் தான் அடுத்ததாக நடிக்கும் படங்களுக்கு சற்று உயர்த்தி கேட்டு வருகிறாராம். இதுவரை ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்றால் சம்பளமாக யோகி பாபு 10 லட்சம் தான் அதாவது ஒரு நாள் கணக்கு படி 10 லட்சம் சம்பளம் வாங்கினாராம். எத்தனை நாள் கால்ஷீட் கேட்டு நடித்து கொடுக்கிறாரோ அதற்கு ஏற்றது போல சம்பளத்தை வாங்கி வந்தாராம்.
ஆனால், தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் வருகிறது என்ற காரணத்தால் தனது ஒரு நாள் சம்பளத்தை 12 லட்சமாக உயர்த்தி இருக்கிறாராம். தன்னிடம் தேடி வரும் தயாரிப்பாளர்களிடமும் தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கூறிவிடுகிறாராம். குறைத்து பேசினால் கூட 10 லட்சம் இருந்தால் மட்டும் தான் படத்தில் நடிக்கவே சம்மதம் தெரிவிக்கிறாராம். அது மட்டுமின்றி, ஒரு படத்தில் நடிக்க பணம் வாங்கிவிட்டு அடுத்ததாக அதே கால்ஷீட்டை வேறு படத்திற்கும் கொடுத்து விடுகிறாராம்.
இது மட்டுமின்றி, கமிட் ஆகி நடித்து வரும் படங்களை தவிர்த்து நடித்து முடித்து இருக்கும் பாதி படங்களுக்கு டப்பிங் பேசாமலும் யோகி பாபு இருக்கிறாராம். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…