பேசுன சம்பளத்தை விட அதிகமா கேட்டாரா எம்.ஜி.ஆர்? உண்மையை உடைத்த தயாரிப்பாளர் !

Published by
அகில் R

M.G.R : எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பணியாற்றிய ஒரு படத்திற்கு அதிக சம்பளம் கேட்டதாக வந்த ஒரு தகவலை தெளிவு படுத்தி கூறி இருக்கிறார். அந்த படத்தின் தயாரிப்பாளர்.

சினிமா துறையில் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட நடிகர் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஒரு படத்திற்கு இரண்டு முதல் 3 லட்சம் வரை சம்பளம் வாங்கும் எம்.ஜி.ஆர், அன்பே வா படத்தின் போது வாங்கிய சம்பளத்தை விட கூட கேட்டதாக ஒரு சில பத்திரிகைகளில் அன்றைய நாட்களில் எழுதினார்கள்.

அதனை குறித்து பல சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில் தற்போது அன்பே வா படத்தின் தயாரிப்பாளரான எம்.சரவணன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதனை விளக்கி கூறியிருக்கிறார். அவர் பேசுகையில்,”அன்பே வா படத்தின் போது எம்.ஜி.ஆர் உடன் அந்த படத்திற்கு 3 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசி இருந்தோம். மேலும், நான் அந்த படத்தை வருகிற 1966 ம் ஆண்டின் பொங்கல் அன்று வெளியிட வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தேன்.

அப்போது எம் .ஜி.ஆர் என்னோடு அதே நாளில் வீரப்பா தயாரிக்கும் ‘நான் ஆணையிட்டால்’ படமும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். நான் அதற்கு ஒப்புக்கொண்டு விட்டேன்  சரி கவலைய உடுங்க நான் வீராப்பாவிடம் பேசி கொள்கிறேன் என்று போனார். அதன் பின் வீரப்பா (RMV) என்னிடம் வந்து பேசினார்.

வீரப்பா என்னிடம் வந்து, “உங்கள் படத்தை எம்.ஜி.ஆர் முன்னதாக அதாவது பொங்கல் அன்று வெளியிட சொல்லிவிட்டார். என் படத்தை தள்ளி வெளியிட கூறிவிட்டார். மேலும், ஒரு ரூ.25 ஆயிரம் கூடுதல் வேண்டும் என்று கேட்டார்” என்று கூறினார். அதை எம்.ஜி.ஆர் தான் கேட்டாரா என்று எனக்கு இப்பொது வரை தெரியாது. ஆனால், மொத்தமாக ரூ.3,25,000 அவருக்கு அன்பே வா படத்திற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுத்தோம்.

ஒரு பிரச்சனை இல்லாமல் படத்தை நன்றாக முடித்து கொடுத்ததுடன், படமும் சொன்ன தேதியான பொங்கலுக்கும் வெளியானது”, என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளரான எம்.சரவணன் பேசி இருந்தார். 1966 ஜனவரி 14 – தேதி ரிலீஸ் ஆன ‘அன்பே வா’ திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

50 minutes ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

2 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

3 hours ago