இது பொள்ளாச்சி பிரச்சனை இல்லை.! திட்டவட்டமாக மறுத்த இயக்குனர்.!

Published by
Castro Murugan

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தியது என கூறப்பட்டிருந்த நிலையில் அதனை மறுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தயாரித்துள்ளது இப்படத்தில் பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் மார்ச் மாதம் 10ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்படத்தின் டீஸர், டிரெய்லர் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

இப்படத்தின் கதைகளமானது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தி இருக்கும் என முதலில் கூறப்பட்டு வந்தது. இதுபற்றி இயக்குனர் பாண்டிராஜிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது அவர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்த திரைப்படம் பொள்ளாச்சி சம்பவத்தை மட்டுமே வைத்து எடுக்கப் பட்டது கிடையாது. இப்படம் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை உணர்த்தும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் வகையிலும், இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த பாலியல் கொடுமைகள் பற்றியும் இப்படம் பேசும். அதனால், பொள்ளாச்சி சம்பவத்தை மட்டும் வைத்து எதிர்பார்த்து படத்திற்கு வரவேண்டாம் இப்படம் பெண் குழந்தைகளைக் கொண்ட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக இருக்கும் என குறிப்பிட்டார்.

Recent Posts

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

15 minutes ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

1 hour ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

2 hours ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

2 hours ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

10 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

11 hours ago