சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தியது என கூறப்பட்டிருந்த நிலையில் அதனை மறுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தயாரித்துள்ளது இப்படத்தில் பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் மார்ச் மாதம் 10ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்படத்தின் டீஸர், டிரெய்லர் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதைகளமானது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தி இருக்கும் என முதலில் கூறப்பட்டு வந்தது. இதுபற்றி இயக்குனர் பாண்டிராஜிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது அவர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த திரைப்படம் பொள்ளாச்சி சம்பவத்தை மட்டுமே வைத்து எடுக்கப் பட்டது கிடையாது. இப்படம் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை உணர்த்தும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் வகையிலும், இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த பாலியல் கொடுமைகள் பற்றியும் இப்படம் பேசும். அதனால், பொள்ளாச்சி சம்பவத்தை மட்டும் வைத்து எதிர்பார்த்து படத்திற்கு வரவேண்டாம் இப்படம் பெண் குழந்தைகளைக் கொண்ட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக இருக்கும் என குறிப்பிட்டார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…