கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை..!

Published by
பால முருகன்

பிரபல பாலிவுட் நடிகையான மலைகா அரோரா பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் வெளியன் “உயிரே” படத்தில் தக்க தைய தைய பாடலுக்கு ரயில் மீது நடனம் செய்தது மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், நேற்று நடிகை மலைக்கா அரோரா நேற்று இரவு கார் விபத்தில் சிக்கினார். நேற்று புனேயில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது ரேஞ்ச் ரோவர் காரில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மலைகா அரோரா காருக்கு முன்னாள் சென்ற கொண்டிருந்த சுற்றுலா வாகனம் ஒன்று புனே செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென பிரேக் செய்து நிறுத்தப்பட்டது. இதனால், மலைகா அரோரா காரும், அவரது காருக்கு பின்னால் வந்த மற்றொரு சுற்றுலா வாகனமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மூன்று வாகனங்களில் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. நடிகை மலைகா அரோராவிற்கு லேசாக தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, மலைக்காவின் உடல் நிலை குறித்து அவரது  சகோதரி அம்ரிதா பேசியுள்ளார். அவர் கூறியதாவது “மலைக்கா உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது. தலையில் லேசாக அடிபட்டுள்ளதால். மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். இன்னும் சிறிது நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பிறகு இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நினைக்கிறேன். சிடி ஸ்கேன் முடிவுகளில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே வந்துள்ளது. ” என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

5 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago